spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா3 படத்திற்கு மீண்டும் பெருகும் வரவேற்பு... ரசிகர்களுக்கு படக்குழு நன்றி...

3 படத்திற்கு மீண்டும் பெருகும் வரவேற்பு… ரசிகர்களுக்கு படக்குழு நன்றி…

-

- Advertisement -
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கடந்த 2012ம் ஆண்டு வெளியான திரைப்படம் 3. இப்படத்தில் தனுஷ் நாயகனாகவும், ஸ்ருதிஹாசன் நாயகியாகவும் நடித்திருந்தனர். மேலும், சிவகார்த்திகேயன், சுந்தர் ராமு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். 11 வருடங்களுக்குப் பிறகு இந்தப் படம் திரையரங்குகளில் மறு வெளியீடு செய்யப்பட்டது. இந்தப் படத்திற்கு கடந்த முறை கிடைந்த வரவேற்பை போலவே மீண்டும் பெரும் வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ளது. இதனால் படக்குழுவினர் அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றனர்.

படத்திற்கு கிடைத்த வரவேற்பிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகர் தனுஷ் டிவிட்டர் பக்கத்தில், பதிவு ஒன்றையும் பகிர்ந்திருக்கிறார். அதில், ‘3’ படத்தின் ரீ-ரிலீஸுக்கு கிடைத்திற்கும் வரவேற்பு எமோஷனலாக உள்ளது. மனம் நிறைந்துள்ளது. மில்லியன் நன்றிகள்” என்று பதிவிட்டுள்ளார். தனுஷின் இந்த ட்வீட்டை ரீவீட் செய்து தனது அனுபவங்களை சுந்தர் ராமு பகிர்ந்துள்ளார்.

அதில் 3 திரைப்படமும், மயக்கம் என்ன திரைப்படமும் என் வாழ்க்கையை மாற்றியது. இந்த இரண்டு படங்களிலும் நிறைய புதுமைகளும், நுணுக்கங்களும் இருந்தன. அதனை நான் இன்னும் அதிகமாக புரிந்திருக்க வேண்டும். சிறந்த நடிகர்களில் ஒருவராக விளங்கும் தனுஷிடம் இருந்து, ஒரு நடிகனாக கற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் கிடைத்தன. இரண்டு படங்களிலும் சில குறைபாடுகள் இருந்தன. அவை இன்னும் கொஞ்சம் மெருகேற்றப்பட்டிருக்கலாம். இரண்டு படங்களின் இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் எப்போதும் என் மனதிற்கு நெருக்கமானவர்களாக இருப்பார்கள் என்று கூறியுள்ளார்.

MUST READ