- Advertisement -
கையில் காயத்துடன் ரித்திகா சிங் பதிவிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ரித்திகா சிங். குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங், தமிழில் இறுதிச்சுற்று படத்தின் மூலம் அறிமுகமானார். சுதா கொங்கரா இப்படத்தை இயக்கியிருந்தார். படத்தில் மாதவன் நாயகனாக நடித்திருப்பார். இத்திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, ரித்திகாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.
ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, குரு ஆகிய திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்தார். அசோக் செல்வனுடன், ரித்திகா சிங் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே திரைப்படம் பெரிய ஹிட் அடித்தது. விஜய் சேதுபதி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமன்றி தெலுங்கிலும் பல திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். அண்மையில் அவரது நடிப்பில் கொலை என்ற திரைப்படம் வெளியானது. இந்நிலையில், ரஜினி நடிக்கும் 170-வது படத்தில் ரித்திகா சிங் ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
रजनीकांत की को-एक्ट्रेस रितिका सिंह कांच के टुकड़े लगने से हुई जख्मी, फिल्म 'थलाइवर 170'की शूटिंग के दौरान हुआ हादसा#rajanikanth #RitikaSingh #Thalaivar170 #Tollywood #tollywoodactress #entertainment #southindianactresses #cinemaupdate #rajanikanth #SouthCinema pic.twitter.com/qCyZ5GNEOJ
— GNN News MP/CG (@gnnnewsdigital) December 5, 2023
