spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்தொட்டால் சிணுங்கி மருத்துவ பயன்கள் பற்றி அறிவோம்!

தொட்டால் சிணுங்கி மருத்துவ பயன்கள் பற்றி அறிவோம்!

-

- Advertisement -

தொட்டால் சிணுங்கி மருத்துவ பயன்கள் பற்றி அறிவோம்!தொட்டால் சிணுங்கி என்பது தமிழ்நாட்டில் உள்ள எல்லா பகுதிகளிலும் தானாக வளரக்கூடியது. இது ஈரப்பதமான தரையில் 5 சென்டிமீட்டர் வரை படரக்கூடியது. இதன் இலைகளின் இடையில் ஊதா நிற பூக்கள் இருக்கும். அதாவது மேலே சிவப்பாகவும் அடியில் ஊதா நிறமாகவும் காணப்படும். இதன் இலைகள் மாலை நேரங்களில் உள்பக்கமாக மூடிவிடும். மூடிய இலைகள் பகலில் அரை மணி நேரம் கடந்து விரிந்து காணப்படும். இந்த இலைகளை தொடும்போது அதிலுள்ள சக்தி மனிதனுக்குள் மின்சாரம் போல் பாயும். தற்போது இதன் மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்.

தொட்டால் சிணுங்கி வேரையும் இலைகளையும் சம அளவில் எடுத்துக்கொண்டு அதனை காய வைத்து பொடி செய்து, சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை 15 கிராம் பசும்பாலில் சேர்த்து குடித்து வந்தால் சிறுநீர் சம்பந்தமான நோய்கள், ஆசனக் கடுப்பு, மூலச்சூடு போன்றவை குணமாகும்.

we-r-hiring

இந்த சூரணத்தை ஐந்து முதல் ஆறு நாட்கள் காலை வேளையில் 10 கிராம் அளவு தயிரில் சேர்த்து சாப்பிட சூடு பிடிக்கும் சமயங்களில் சிறுநீர் தாரை எரிவது, சிறுநீர் எரிச்சல் போன்றவை குறையும்.தொட்டால் சிணுங்கி மருத்துவ பயன்கள் பற்றி அறிவோம்!

தொட்டால் சிணுங்கி இலையை ஒரு கை அளவு எடுத்து அதனை மோரில் சேர்த்து கலந்து மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்று கடுப்பு, வயிற்றுப்புண் ஆகியவற்றிற்கு நல்ல தீர்வளிக்கும்.

தொட்டால் சினுங்கி இலையை சுத்தம் செய்து சிறிதளவு வெங்காயம், சிறிதளவு சீரகம் சேர்த்து அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு பிரச்சனை குணமடையும்.

தோலில் ஏற்படும் படை, தேமல் போன்ற நோய்கள் குணமாக இதன் இலைகளை அரைத்து சாறு பிழிந்து, அதனை நோய் உள்ள இடங்களில் தடவி வர விரைவில் குணமடையும்.

இம்முறைகளை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்தவித ஒவ்வாமையும் ஏற்படவில்லை எனில் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம்.

MUST READ