- Advertisement -
பிரபல இந்தி நடிகர் ஷ்ரேயாஸ் தல்படேவுக்கு படப்பிடிப்பின்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பிரபல பாலிவுட் நடிகர் ஷ்ரேயாஸ் தல்படே. அவருக்கு வயது 47. இவர் இந்தி மற்றும் மராத்தி சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். 2005-ம் ஆண்டு வெளியான இக்பால் திரைப்படத்தில் சிறப்பு திறன் கொண்ட விளையாட்டு வீரராக நடித்து புகழ் பெற்றவர். அத்துடன் மராத்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்கள் மூலமாக மக்களிடையே வரவேற்பை பெற்றார். இந்நிலையில், , மும்பையில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவர், படப்பிடிப்பு தளத்திலேயே திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து இந்த பகுதியில் உள்ள பெல்லூவ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.



