Homeசெய்திகள்இந்தியா"தமிழக அரசு கற்றுக் கொண்டது என்ன? ரூபாய் 4,000 கோடி எங்கே போனது?"- மத்திய நிதியமைச்சர்...

“தமிழக அரசு கற்றுக் கொண்டது என்ன? ரூபாய் 4,000 கோடி எங்கே போனது?”- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சரமாரி கேள்வி!

-

- Advertisement -

 

"தமிழக அரசு கற்றுக் கொண்டது என்ன? ரூபாய் 4,000 கோடி எங்கே போனது?"- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சரமாரி கேள்வி!

தமிழகத்திற்கான வெள்ள நிவாரண நடவடிக்கை தொடர்பாக, டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “மழை எவ்வளவு பெய்யும் என்பது குறித்து ஐந்து நாட்களுக்கு முன்பே வானிலை முன்னெச்சரிக்கை வழங்கப்பட்டது. தமிழ்நாட்டின் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் செயல்படுகின்றனர். சென்னை வானிலை ஆய்வு மையத்தை இழுத்து மூட வேண்டும் எனக் கூறுவது தவறு.

ஆவடியில் இருந்து தென் மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு!

கனமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கவில்லை. மழை பாதிப்பில் இருந்து மக்களை மீட்க தமிழக அதிகாரிகள் விரைந்து செயல்படவில்லை. தேசிய பேரிடர் மீட்புப் படை செல்வதற்கு முன் தமிழக அதிகாரிகள் யாரும் மீட்புப் பணியில் இல்லை. ரூபாய் 4,000 கோடி செலவிட்டு மழைநீர் வடிகால் அமைத்ததாக அமைச்சர் கூறினாரே.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் இருந்துவிட்டு வானிலை ஆய்வு மையம் மீது குற்றம்சாட்டுவது ஏன்? இன்ச் பை இன்ச் இவ்வளவு மழை பெய்யும் என சரியாக கணித்துக் கூற முடியாது. தமிழக அமைச்சர்கள் எப்போது பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்றனர்? வெள்ளத் தடுப்பு நடவடிக்கைக்காக செலவு செய்ததாகக் கூறிய ரூபாய் 4,000 கோடி என்னவானது?

மின்வாரிய ஊழியர் பலி – மின்பழுதை சரி செய்யும் பொழுது நடந்த விபரீதம்

தென்மாவட்ட மழை பாதிப்பின் போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் இருந்தார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பது இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது. தமிழக மக்களுடன் நிற்காமல் இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்தியா கூட்டணி கூட்டத்தை முடித்த பின் போகிற போக்கில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார்” என்று விமர்சித்துள்ளார்.

MUST READ