spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிஆவடியில் இருந்து தென் மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு!

ஆவடியில் இருந்து தென் மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு!

-

- Advertisement -

தென் மாவட்டங்களில் ஏற்பட்ட இயற்கை பேரிடர் மற்றும் பெரும் மழை காரணமாக பாதிப்படைந்த மக்களுக்கு 15 லட்சம் மதிப்பீட்டிலான நிவாரண பொருட்களை கொடியசைத்து, அனுப்பி வைத்த ஆவடி சட்டமன்ற உறுப்பினர் நாசர்.

தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பேரிடரில் பாதிப்படைந்த மக்களுக்கு நிவாரண பொருட்களை கொடியசைத்து, அனுப்பி வைத்த ஆவடி சட்டமன்ற உறுப்பினர் நாசர்.

we-r-hiring

தென் மாவட்டங்களில் ஏற்பட்ட இயற்கை பேரிடர் மற்றும் பெரும் மழை காரணமாக பாதிப்படைந்த மக்களுக்கு  சன் செய்தியாளர் ஆவடி மூர்த்தி மற்றும் ஆவடி வணிகர் சங்கம் இனைந்து நிவாரண பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பேரிடரில் பாதிப்படைந்த மக்களுக்கு நிவாரண பொருட்களை கொடியசைத்து, அனுப்பி வைத்த ஆவடி சட்டமன்ற உறுப்பினர் நாசர்.

அதில் 500 அரிசி மூட்டைகள், 1000 பேருக்கான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகள், 1000 போர்வைகள், புடவை, லுங்கி என 15 லட்சம் மதிப்பிட்டிலான நிவாரண பொருட்கள்   ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பேரிடரில் பாதிப்படைந்த மக்களுக்கு நிவாரண பொருட்களை கொடியசைத்து, அனுப்பி வைத்த ஆவடி சட்டமன்ற உறுப்பினர் நாசர்.

நிவாரண பொருட்கள் ஏற்றப்பட்ட வாகனத்தை   ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு. நாசர் கொடியசைத்து அனுப்பி வைத்தார். முன்னதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிவாரண பொருட்களை பார்வையிட்ட அவர், நிவாரண பொருட்கள் முறையாக கொண்டு போய் சேர்க்க உத்தரவிட்டார்.

தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பேரிடரில் பாதிப்படைந்த மக்களுக்கு நிவாரண பொருட்களை கொடியசைத்து, அனுப்பி வைத்த ஆவடி சட்டமன்ற உறுப்பினர் நாசர்.

இதில் ஆவடி மாநகர ஆணையர் ஷேக் அப்துல் ரகுமான், மாநகர மேயர் உதயகுமார், மாநகர செயலாளர் சன் பிரகாஷ், பகுதி செயலாளர் பொன் விஜயன், சன் செய்தியாளர் ஆவடி மூர்த்தி, ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

MUST READ