spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாசபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கு கட்டணமில்லா வைஃபை!

சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கு கட்டணமில்லா வைஃபை!

-

- Advertisement -

 

we-r-hiring

சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கு கட்டணமில்லா வைஃபை சேவைத் தொடங்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி மீன்களை வாங்க குவிந்த மக்கள்!

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பக்தர்களின் வசதிக்காக, வைஃபை வசதியை திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தொடங்கியுள்ளது. பிஎஸ்என்எல், தேவஸ்வம் போர்டு சார்பில், வைஃபை சேவையை திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் பிரசாந்த் தொடங்கி வைத்தார்.

முதல் கட்டமாக, சன்னிதானம், நடைப்பந்தல், திருமுற்றம், மாளிகைப் புறம், அப்பம்- அரவணை கவுன்டர்கள் உள்பட15 இடங்களில் வைஃபை திட்டம் ஹாட்ஸ்பாட் திட்டம் அமலாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பக்தரின் மொபைல் எண்ணிற்கும் முதல் அரை மணி நேரம் வைஃபை இலவசமாக வழங்கப்படும்.

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் நிதியுதவி!

அரை மணி நேரத்திற்கு பின் ஒரு ஜி.பி.க்கு ரூபாய் 9 செலுத்தி வைஃபை சேவையைத் தொடரலாம். மேலும் ரூபாய் 99- க்கு ரீசார்ஜ் செய்து ஒரு நாளைக்கு 2.5 ஜி.பி. திட்டத்தில் பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ