
திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் நடைபெற்ற ‘சமத்துவ பொங்கல்’ விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் சங்கர் ஜிவால் இ.கா.ப. குடும்பத்துடன் கலந்து கொண்டார். ஆவடி காவல் அணையாளர் சங்கர் தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழாவில், கூடுதல் காவல் ஆணையாளர் ராஜேந்திரன் இ.கா.ப., ஆவடி காவல் ஆணையரகத்தின் அனைத்து காவல் அதிகாரிகளும் குடும்பத்துடன் கலந்துக் கொண்டனர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’…. இரண்டாவது பாடல் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
குத்துவிளக்கேற்றி பொங்கல் விழாவைத் தொடங்கி வைத்த தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் சங்கர் ஜிவால் இ.கா.ப., பொங்கல் வைத்து, விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
சமத்துவ பொங்கல் விழாவில் கரகாட்டம், செண்டா மேளம், தாரைதப்பட்டை, கயிறு இழுக்கும் போட்டி, இன்னிசை நிகழ்ச்சி மற்றும் Slow Cycle Race ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இவ்விளையாட்டு போட்டிகளில் காவல்துறையினர் மட்டுமின்றி, அவர்களது குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.
ஜெய் பீம் மணிகண்டன் நடிக்கும் ‘லவ்வர்’…. ரிலீஸ் தேதி அறிவிப்பு!
குறிப்பாக, தமிழர்களின் பாரம்பரியத்தைப் பறைச்சாற்றும் வகையில், தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் மட்டுமின்றி காவலர்கள், காவல்துறை உயரதிகாரிகள் அனைவரும் வேட்டி, சட்டை அணிந்து பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர்.