நீங்கள் மரியாதை கொடுத்தால் மக்களும் மரியாதை கொடுப்பார்கள் என சச்சின் பைலட் பேசியுள்ளார் – ராஜஸ்தானில் உள்ள காங்கிரஸ் கட்சியில் அதிகரிக்கும் உச்சகட்ட வார்த்தை போர்.
ராஜஸ்தான் மாநிலத்தின் முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் இடையே வார்த்தை போர் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மகாராஜா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சச்சின் பைலட்,
அனைவருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என்று தான் நம்மை வளர்த்திருப்பார்கள், ஆனால் 32 பற்களுக்கு பின்னால் இருக்கும் நாக்கை கட்டுப்படுத்துவது கடினம் என்றாலும் அதை செய்ய வேண்டும்.

அப்படி செய்தால் தான் மற்றவர்களும் நமக்கு மரியாதை அளிப்பார்கள் என அசோக் லேலண்ட் பெயரை குறிப்பிடாமல் பேசியுள்ளார்.
முதலில் மக்களுக்கு மரியாதை கொடுத்தால் மக்களும் மீண்டும் உங்களுக்கு மரியாதை கொடுப்பார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என சூசகமாக மாணவர்கள் மத்தியில் பேசியுள்ளார்.


