Homeசெய்திகள்தமிழ்நாடுஇளைஞர்களை மிரட்டி பணம் பறித்த கும்பல்.... கைது செய்து அதிரடி காட்டிய காவல்துறை!

இளைஞர்களை மிரட்டி பணம் பறித்த கும்பல்…. கைது செய்து அதிரடி காட்டிய காவல்துறை!

-

- Advertisement -

 

இளைஞர்களை மிரட்டி பணம் பறித்த கும்பல்.... கைது செய்து அதிரடி காட்டிய காவல்துறை!

கோவை மாநகரைச் சேர்ந்தவர் சபரி. 22 வயதான இவர் தனியார் கல்லூரியில் பட்டப்படிப்புப் படித்து வருகிறார். படிப்பின் மீது கவனம் செலுத்தாத சபரி பணம் சம்பாதிப்பதில் கவனம் செலுத்தி வந்துள்ளார். இந்த நிலையில், தனது கல்லூரி நண்பர்களுடன் சேர்ந்து அடிக்கடி ஊர் சுற்றியும், அவர்களுடன் இணைந்து மாடு அருந்தியும் வந்துள்ளார் சபரி.

ராமர் கோயில் திறப்பு- மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரைநாள் விடுமுறை!

சபரி தனது நண்பர்களுடன் இணைந்து 20 வயதுக்கும் உள்ளானோரின் செல்போன் எண்களை சேகரித்து வந்துள்ளார். அதைத் தொடர்ந்து, சேகரிக்கப்பட்ட எண்களைக் கொண்டு அவர்களை தொலைபேசியில் அழைத்துப் பேசியுள்ளனர். அப்போது, அவர்களிடம் சபரி, ‘நான் போலீஸ் பேசுறேன்; உங்கள பத்தி கேஸ் வந்துருக்கு; நீங்க செல்போன்ல ஆபாச படம் பார்த்துருக்கீங்க, அது சட்டப்படி குற்றம்; உங்கள சீக்கரம் அரெஸ்ட் பண்ண போறோம்” என அவர்களுக்கு பயம் காட்டியுள்ளனர்.

உங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றால் பணத்தைத் தரும் படி, சபரி மற்றும் நண்பர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து, மர்ம கும்பல் கேட்ட பணத்தை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தி உள்ளனர். இதேபோல், சபரி மற்றும் அவரது குழுவினர், பல இளைஞர்களிடம் பல லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்று ஏமாற்றியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள், கோவை இணைய வழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர், வங்கிக் கணக்கு விவரங்களைக் கொண்டு தீவிர விசாரணை நடத்தினர். அதில் சபரி மற்றும் அவரது நண்பர்கள் தான் இத்தகைய மோசடியில் ஈடுபட்டிருந்தது என்பது தெரிய வந்தது.

ஆதாரை பிறந்த தேதி ஆவணமாக பயன்படுத்த முடியாது – EPFO அறிவிப்பு

இதையடுத்து, சபரி உள்பட 9 பேரை காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

MUST READ