spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஸ்ரீசேஷாத்ரி மணிமண்டபத்தில் இல.கணேசன் சுவாமி தரிசனம்

ஸ்ரீசேஷாத்ரி மணிமண்டபத்தில் இல.கணேசன் சுவாமி தரிசனம்

-

- Advertisement -

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள அகரம் ஸ்ரீசேஷாத்ரி மணிமண்டபத்தில் நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் இன்று குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.

we-r-hiring

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த வழூர் அகரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் மணிமண்டபத்தில் நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் சுவாமி தரிசனம் செய்வதற்காக தனது குடும்பத்தினருடன் அங்கு வருகை தந்தார். அவருக்கு மணிமண்டப ஸ்தாபகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்து ஆலய நிர்வாக மரியாதை அளித்தனர். முன்னதாக ஆளுநர் இல.கணேசனுக்கு தமிழக காவல்துறை சார்பில் அணிவகுப்பு மற்றும் அரசு மரியாதை அளிக்கப்பட்டது. தமிழக காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் இல.கணேசன் ஏற்றுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து சேஷாத்திரி சுவாமி திருவுருவசிலைக்கு சந்தன அபிஷேகம் பாலாபிஷேகம் செய்யப்பட்டது. சுவாமி தரிசனம் கண்டு வழிபாடு செய்த அவர் தொடர்ந்து மணிமண்டபத்தை சுற்றி பார்த்து கோவிலின் வரலாற்றை கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து இல.கணேசன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் வருகையை முன்னிட்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

MUST READ