- Advertisement -
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங், பசுமைத் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாலிவுட் திரையுலகம் மட்டுமன்றி தென்னிந்திய திரையுலகிலும், டாப் நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தமிழில் கௌதம் கார்த்தி நடித்த என்னமோ ஏதோ படத்தில், நாயகியாக அறிமுகமானார். இப்படம் கடந்த 2014-ம் ஆண்டு திரைக்கு வந்தது. இதைத் தொடர்ந்து, எச் வினோத் இயக்கத்தில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். கார்த்திக்கு ஜோடியாக இப்படத்தில் நடித்திருப்பார். இத்திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார்.
