spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் ஆட்டோ ஓட்டுனராக மாறிய நடிகர் பரத்!

சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் ஆட்டோ ஓட்டுனராக மாறிய நடிகர் பரத்!

-

- Advertisement -

நடிகர் பரத், கடந்த 2003இல் வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராக திரைத் துறையில் தன் பயணத்தை தொடங்கியவர். அதைத் தொடர்ந்து செல்லமே படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார்.சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் ஆட்டோ ஓட்டுனராக மாறிய நடிகர் பரத்! பின்னர் 2004 இல் காதல் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி முதல் படத்திலேயே நல்ல பெயரையும் புகழையும் பெற்று ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அதைத்தொடர்ந்து வெயில், கூடல் நகர், கண்டேன் காதலை போன்ற பல வெற்றி படங்களில் நடித்தார். கடைசியாக நடிகர் பரத், மலையாள படத்தின் ரீமேக்கான லவ் படத்தில் நடித்திருந்தார். பின்னர் நேரடியாக ஓடிடியில் வெளியான இப்படிக்கு காதல் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இருப்பினும் சமீபகாலமாக பரத் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்களை பெரிதும் கவரவில்லை. சில தினங்களுக்கு முன்பாக நடிகர் பரத், விருமன், கொம்பன் உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்த முத்தையா இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் வில்லனாக நடிப்பதாக தகவல் கசிந்திருந்தது. சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் ஆட்டோ ஓட்டுனராக மாறிய நடிகர் பரத்!இந்நிலையில் பெரிய அளவில் சினிமா வாய்ப்பு கிடைக்காததால் நடிகர் பரத், ஓட்டுனராக மாறி ஆட்டோ ஓட்டி வருகிறார் என்று பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதன்படி நடிகர் பரத் ஆட்டோ ஓட்டுநராக இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இருப்பினும் இது ஏதேனும் புதிய படத்திற்கான கதாபாத்திரமாக இருக்கலாம் என்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

MUST READ