- Advertisement -
சலார் படத்தை இயக்கி முடிந்த பிரசாந்த் நீல் அடுத்தடுத்து பிரம்மாண்ட படங்களை இயக்கி வருகிறார்.

கடந்த 2014-ம் ஆண்டு வெளியான கன்னட படமான உக்ரம் திரைப்படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார் பிரசாந்த் நீல். இதைத் தொடர்ந்து 2018-ம் ஆண்டு யாஷ் நடிப்பில் கேஜிஎஃப் திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் முதலில் கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்றது. எதிர்பாராமல் இப்படத்திற்கு கிடைத்த வெற்றி, இத்திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் டப் செய்யப்பட்டது. முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தை இயக்கினார்.


கடந்த 2022-ம் ஆண்டு வெளியான இத்திரைப்படம், பான் இந்தியா படமாக வெளியானது. ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்த இத்திரைப்படம், சுமார் ஆயிரத்து 500 கோடி ரூபாய் வசூலித்தது. கன்னட சினிமாவில் அதிகம் வசூலித்த திரைப்படம் என்ற சாதனையையும் கைப்பற்றியது. இத்திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு பிரசாந்த் நீல் இயக்கிய திரைப்படம் சலார். இப்படத்தில் பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தை தொடர்ந்து சலார் இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார்.



