Homeசெய்திகள்சினிமாஆவணப்படத்தை இயக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்... கேரளா சென்று களஆய்வு...

ஆவணப்படத்தை இயக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்… கேரளா சென்று களஆய்வு…

-

- Advertisement -
தனுஷ் நடித்த 3 திரைப்படத்தின் மூலம் இயக்குநராக திரைக்கு அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஆவார். 3 திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றி இவரை முன்னிறுத்தியது. இதைத் தொடர்ந்து கௌதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை என்ற படத்தை இயக்கினார். இத்திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, அடுத்த படத்திற்கு தயாராகிக் கொண்டிருந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் இருவரும், தங்களின் விவாகரத்தை அறிவித்தனர்.

இருவரும் பிரிவதாக அவரவர் சமூக வலைதளப் பக்கங்களில் அறிவித்திருந்தனர். இதைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லால் சலாம் திரைப்படத்தை இயக்கினார். இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடித்திருந்தனர். நடிகர் ரஜினி கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், அடுத்து ஐஸ்வர்யா இயக்கும் ஆவணப்படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, கேரள மாநிலம் திருவனந்தபுரம் மருத்துவமனையில் பணியாற்றி சில ஆண்டுகளுக்கு முன்பு காலமான கேன்சர் சிகிச்சை மருத்துவர் டாக்டர் சி.பி.மேத்யூ என்பவரை பற்றிய ஆவணப்படத்தை இயக்கி வருகிறார். இதற்காக கேரளா சென்றுள்ள அவர், மருத்துவருக்கு தொடர்புடைய பலரையும் சந்தித்து படத்திற்கு தேவையான தகவல்களை திரட்டி வருகிறார்.

MUST READ