தளபதி என்று தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய். இவர் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் அடித்து நொறுக்கியது. அதைத் தொடர்ந்து விஜய் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் ஏறத்தாழ நிறைவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்ததாக விஜய் தனது 69 வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்க இருக்கிறார். நடிகர் விஜய், தளபதி 69 படத்திற்கு பிறகு அரசியலில் மட்டுமே கவனம் செலுத்த இருப்பதாக அறிவித்திருந்தார். மேலும் தளபதி 69 படம் தொடர்பான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இருப்பினும் படம் தொடர்பான அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அதன்படி இந்த படத்தில் விஜயுடன் இணைந்து திரிஷா, ஆலியா பட், மிர்ணாள் தாகூர், சமந்தா உள்ளிட்ட பல நடிகைகள் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
அதே சமயம் இந்த படத்தை தயாரிக்கப்போவது யார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பது குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது ஏற்கனவே வெளியான தகவலின் படி இந்த படம் விஜய்க்கு ஏற்ற மாதிரியான அரசியல் கதைக்களம் தான். அதிலும் நடிகர் விஜய் மக்களுக்காக போராடும் ஒரு தலைவனாக இந்த படத்தில் நடிக்க போகிறாராம். இந்த தகவல் அறிந்த ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேன்மேலும் அதிகமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -