spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை... ஆங்காங்கே நீடிக்கும் குழப்பங்கள்...

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை… ஆங்காங்கே நீடிக்கும் குழப்பங்கள்…

-

- Advertisement -
18-வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்து அரியணை ஏறப்போவது யார் என்று எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 8.50 மணியளவில், மொத்தமாக பாஜக 213 இடங்களிலும், காங்கிரஸ் 129 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 12 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. தமிழகத்தில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக கூட்டணி கட்சிகள் முன்னிலை வகிக்கின்றன.
இந்நிலையில், ஆங்காங்கே சில குழப்பங்களும் நீடித்து வருகின்றனர். அந்த வகையில் நெல்லை மாவட்டம் அம்பை பகுதியில் வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையின் சாவி தொலைந்துபோனது. இதனால் பூட்டு உடைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது. வேலூரில் வாக்கு எண்ணும் மையத்தில் பொது இருக்கைகள் வைக்கப்படாததால், கட்சியினர் கோபத்தில் கூச்சல் போட்டனர். இதனால் மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தென் சென்னை பகுதியில்  வாக்கு எண்ணிக்கை தாமதமாக தொடங்கியதால் குழப்பம் நீடிக்கிறது.

MUST READ