spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமீண்டும் இபிஎஸ் அணிக்கு திரும்பும் வைத்திலிங்கம்? - ஓபிஎஸ் ஷாக்...!

மீண்டும் இபிஎஸ் அணிக்கு திரும்பும் வைத்திலிங்கம்? – ஓபிஎஸ் ஷாக்…!

-

- Advertisement -

vaithilingam

ஓ.பன்னீர்செல்வத்தின் முக்கிய ஆதரவாளராக விளங்கி வரும் வைத்திலிங்கம் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்கு திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

we-r-hiring

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியதை அடுத்து ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் அனைத்து வழக்குகளிலும் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்தது. மேலும் அதிமுகவின் கொடி, சின்னம், கரை வேஷ்டி உள்ளிட்டவற்றை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக தனியாகவும், ஓ.பன்னீர்செல்வம் தனியாகவும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெற்றது.

வைத்திலிங்கம்

இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் முக்கிய ஆதரவாளராக விளங்கி வரும் வைத்திலிங்கம் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்கு திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக பிரிவுக்கு பின்னர் நடைபெற்ற பெரும்பாலான தேர்தல்களில் அதிமுக தோல்வியையே சந்தித்து வரும் நிலையில், மீண்டும் கட்சி தலைவர்களை ஒருங்கிணைக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களை தன்வசம் இழுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வைத்திலிங்கம் எடப்பாடி பழனிசாமியின் அணிக்கு மீண்டும் திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக நின்று தோல்வி அடைந்துள்ள நிலையில், அவரின் தீவிர ஆதரவாளர்களான வைத்திலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியுடன் மீண்டும் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்கள் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது.

 

MUST READ