spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகொலை வழக்கில் கைதான நடிகர் தர்ஷன்... மேனேஜர் தற்கொலையால் பரபரப்பு...

கொலை வழக்கில் கைதான நடிகர் தர்ஷன்… மேனேஜர் தற்கொலையால் பரபரப்பு…

-

- Advertisement -
சாண்டல்வுட் எனும் கன்னட திரையுலகில் சொற்ப அளவில் மட்டுமே நடிகர்கள் உள்ளனர். அதிலும், சிலர் மட்டுமே முன்னணி நடிகர்களாகவும், மக்களின் விருப்ப நாயகர்களாகவும் வலம் வருகின்றனர். அதில் ஒருவர் தான் நடிகர் தர்ஷன். இவரது திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உண்டு. இந்நிலையில், கொலை வழக்கில் தொடர்பு உடையதாகக் கூறி கன்னட நடிகர் தர்ஷனை கடந்த 11-ம் தேதி போலீசார் கைது செய்துள்ளனர். இவருடன் சேர்ந்து அந்த வழக்கில் சுமார் 13“ பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வௌியானது.

மைசூரில் உள்ள சம்ராஜேந்திரா விலங்கியல் பூங்கா அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் வைத்து நடிகர் தர்ஷனை போலீசார் கைது செய்தனர். சித்ரதுர்காவைச் சேர்ந்த ரேணுகாசாமி என்ற நடிகை என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், தர்ஷன் கைதானார். தர்ஷனுடன் சேர்ந்து அவரது காதலி பவித்ரா கவுடாவும் கைது செய்யப்பட்டார். போலீஸ் காவலில் உள்ள 13 நபர்களையும் கொலை நடந்ததாக கூறப்படும் பட்டனகரே என்ற பகுதியில் உள்ள கார் செட்டிற்கு அழைத்து சென்று சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் நடிகர் தர்ஷனின் மேலாளர் ஸ்ரீதர் என்பவர் தர்ஷனுக்கு சொந்தமான பெங்களூரூ பண்ணையில் தற்கொலை செய்து கொண்டார். தனிமையில் இருப்பதால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அவர் வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார். இருப்பினும், அவருக்கும் ரேணுகாசாமியின் தற்கொலைக்கும் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர். ஸ்ரீதர் தற்கொலை செய்வதற்கு முன்பாக அவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

MUST READ