- Advertisement -
ஜூலை 11 இல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.
ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம்.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்தது செல்லும் எனவும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுகவில் இருந்து நீக்கியதும் செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.
பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பால் பன்னீர்செல்வம் தரப்பு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது.


