சென்னை வண்டலூர் அருகே பேருந்தில் ஏறிய முதியவருக்கும் நடத்துநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அந்த முதியவரை ஓட்டுநரும் நடத்துநரும் தாக்கிய காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னையில் கிளாம்பாக்கத்திலிருந்து சென்னை மாநகர பேருந்து ஒன்று வண்டலூர் பேருந்து நிலையத்திற்கு வந்தது. அப்போது அங்கு பாஸ் எடுத்திருந்த மாற்றுத்திறனாளி முதியவர் ஒருவர் அந்த பேருந்தில் ஏறினார். அவர் மாற்றுத்திறனாளிகளுக்கான இருக்கையில் அமர்ந்தார். இதற்கு நடத்துநர் எதிர்ப்பு தெரிவித்ததோடு, ஒருமையில் அந்த முதியவரை பேசி திட்டி வேறு இருக்கையில் அமருமாறு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
இதற்கு முதியவர், தன் பக்கத்தில் இருக்கும் நியாயத்தை எடுத்து கூறியுள்ளாா். அப்போது நடத்துநர், அந்த முதியவரை ஆபாசமான வார்த்தைகளில் திட்டியுள்ளாா். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. உடனே அந்த முதியவரின் முடியை பிடித்து இழுத்த நடத்துநர் அவரை வெளியே தள்ளிவிட்டதோடு மட்டுல்லாமல், பேருந்திலிருந்து கீழே இறங்கி போய் முதியவரை தாக்கியுள்ளாா். பதிலுக்கு முதியவரும் கடுமையாக போராடியுள்ளாா். உடனே டிரைவரும் இறங்கி வந்து அந்த முதியவரை தாக்கியுள்ளாா். முதியவரை தாக்கி வலுக்கட்டாயமாக பேருந்திலிருந்து இறக்கிவிட்டுச் ஓட்டுநர், நடத்துநர் சென்றுள்ளனா். இதையடுத்து அந்த பேருந்தில் பயணம் செய்த சிலர் வந்து தடுத்து நிறுத்தினர். இதை அங்கிருந்த சிலா் வீடியோ எடுத்துள்ளனா். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் நடத்துநரும் ஓட்டுநரும் Name badge அணியவில்லை என பயணிகள் புகார் தெரிவித்துள்ளனா்.
வலியால் துடி துடித்து வந்த 92 வயது முதியவர்… மறுஜென்மம் கொடுத்த மருத்துவர்கள்…