Homeசெய்திகள்கட்டுரைசிதறி ஓடும் அதிமுக கூட்டணி! அமித்ஷா ஆபரேஷன் அம்பேல்!

சிதறி ஓடும் அதிமுக கூட்டணி! அமித்ஷா ஆபரேஷன் அம்பேல்!

-

- Advertisement -

விஜய், அதிமுக – பாஜக கூட்டணிக்கு வந்துவிடலாம் என்ற எண்ணத்தில் உள்ளதாகவும், அவ்வாறு கூட்டணிக்கு வந்தால் விஜய்க்கு வெற்றி கிடைக்கலாம். ஆனால் அவரது பிம்பம் உடைந்துவிடும் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் எச்சரித்துள்ளார்.

அதிமுக கூட்டணி கட்சிகளில் நிலவும் சிக்கல்கள் குறித்தும், நடிகர் விஜயின் கூட்டணி நிலைப்பாடு குறித்தும் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- திமுக கூட்டணி உடையாத வரை மெகா கூட்டணி அமைவதற்கான வாய்ப்பு இல்லை. இருக்கிற கூட்டணியை வலுவாக அமைக்க வேண்டும் என்றால் வாய்ப்புள்ள கட்சிகளான பாமக, தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும். பாமகவில் ராமதாஸ் – அன்புமணி சண்டை முடிந்தால்தான் கூப்பிட முடியும். தேமுதிகவை எடப்பாடியும், அதிமுகவும் டீல் செய்த விஷயம் தவறாகும். தேமுதிகவுக்கு, ராஜ்யசபா சீட் கேட்கிறபோது நாங்கள் எப்போது சொன்னோம் என்று எடப்பாடி சொன்னார். ராஜ்யசபா வேட்பாளர் தேர்வு சிறப்பாக இருந்தது. அதன்பிறகு அதிமுக வெளியிட்ட அறிக்கையில் தேமுதிக கூட்டணியில் தொடர்பாக அந்த கட்சியின் நிர்வாகிகள் இல்லாமலேயே அறிவிக்கிறார்கள்.

சில மணி நேரத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, அதிமுகவின் ராஜ்யசபா சீட் ஒதுக்கீட்டை கண்டுகொள்ளவே இல்லை. அப்போது, அவர்கள் தேர்தலை மனதில் வைத்து அவர்களின் கடமையை செய்துவிட்டார்கள். எங்கள் கடமையை ஜனவரியில் சொல்வோம் என்றார். இது கண்ணத்தில் அறைந்தது போல இருந்தது. பிரேமலதாவின் கோபம் என்பது நியாயமானதாகும். நான் மறுக்கவே மாட்டேன். அவர்களை கூப்பிட்டு பேசாமல் தன்னிச்சையாக அறிவித்ததால், அவர்கள் ஜனவரியில் பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிவைத்துவிட்டார். பாஜக வார் ரூம் தொடங்கி உள்ளுக்குள் தகராறு நடைபெற்று கொண்டிருக்கிறது.  அப்பா – மகன் சண்டையில் பாமக ஓடிக்கொண்டிருக்கிறது. அப்போது மெகா கூட்டணி எங்கிருந்து வரும்.

மெகா கூட்டணி அமைய பாஜக மேற்கொள்ளும் அக்கறையை கூட, எடப்பாடி எடுத்துக்கொள்ளவில்லை என்கின்றனர். எடப்பாடியை மிரட்டி கூட்டணி அறிவிக்க வைத்தார்கள். இன்றைக்கு 2 கட்சிகளிலும் உற்சாகம் உள்ளதா?  திமுகவை வீழ்த்த வழி கிடைத்துவிட்டது என்று அதிமுகவினர் உற்சாகமாக இல்லை. துக்கவீடு போன்று உள்ளது. பாஜகவில் அது ஒரு பேசு பொருளாகவே இல்லை. எடப்பாடியை மிரட்டி பாஜக கூட்டணிக்கு வரவைத்ததை விட வேறு என்ன பங்களிப்பை பாஜக செய்தது? பாஜகவால் மற்றொரு விஷயத்தை செய்ய முடியும். விஜய்க்கும், பாஜகவுக்கும் தொடர்பு இருக்கிறது. நான் சந்தேகப்படுகிறேன். ஏனென்றால் ஒய் பிரிவு பாதுகாப்பு எப்படி வாங்கினீர்கள் என்று நானும் 10 முறை கேட்டுவிட்டேன். என்னை போன்று பலரும் கேட்கிறார்கள். விஜய் அதில் கள்ள மவுனம் சாதிக்கிறார். மத்திய அரசு, யார் மீது மனது வைக்கிறதோ அவர்களுக்கு மட்டும்தான் ஒய் பிரிவு பாதுகாப்பு கொடுப்பார்கள். அல்லது உண்மையாகவே தீவிரவாதிகளால் அச்சறுத்தல் இருந்தால் வழங்குவார்கள். ஆனால் தமிழ்நாட்டில் தீவிரவாதம் உள்ளதாக எனக்கு தெரியவில்லை. விஜய்க்கு எங்கிருந்து அச்சுறுத்தல் வந்தது. அப்போது அந்த பாதுகாப்பை மற்ற நடிகர்களுக்கு கொடுப்பீர்களா?

ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கக் கோரி எங்கே விஜய் மனு அளித்தார். யார் மூலம் இதற்கான பணிகள் நடைபெற்றன. பாஜக கொள்கை எதிரி என்றால்? நீங்கள் யாரிடம் சென்று பிராசஸ் செய்தீர்கள். நேர்மையான விஜய் அதை சொல்ல வேண்டும் தானே. அப்போது உங்களுக்கு ஏதோ தொடர்பு உள்ளதால் தானே ட்க் என்று டிக் அடிக்கிறார்கள்.  உடனடியாக ஒரு டீமை அனுப்புகிறார்கள். தவெக சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடுகிறது. தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி. அப்போது அதிமுக என்கிற ஒரு வார்த்தை விஜயின் வாயில் வரவில்லை. முதலமைச்சராக நான் போட்டியிடுகிறேன் என்றால் என்னை எதிர்க்கும் எல்லோரையும் தான் எதிர்க்க வேண்டும். ஒருவரை எதிர்த்துவிட்டு மற்றொருவரை எதிர்க்காமல் இருப்பதா?

அதிமுக குறித்து பேசவே மாட்டேன் என்பது வளர்கிற கட்சிக்கு சரியா? ஆதவ் அர்ஜுனா எடப்பாடியை பேசிவிட்டு, அவரிடம் ஓடோடி சென்று மண்ணிப்பு கேட்டார். ஆதவ் செய்தது சிறுபிள்ளைத்தனமானது. எடப்பாடி அதை சிறப்பாக கையாண்டார். விஜயின் அறிவுரையின் பேரில் தான்  ஆதவ் மண்ணிப்பு கோரினார். ஒரு நல்ல அரசியல்வாதியாக விஜய் ஸ்ட்ராடஜி செய்கிறார் என்ற பாராட்டுகிற அதேவேளையில், நான் ஒரு மாற்று அரசியல் செய்யப் போகிறேன் என்று விக்கிரவாண்டியில் பேசியது அந்த விஜய் நேர்மை அற்றவாக இருக்கிறார். அதிமுகவை மென்மையாக ஹாண்டில் செய்கிறீர்கள். நாளைக்கு கூட்டணிக்கு வந்துவிடலாம் என்று ஒரு பார்வை பார்க்கிறார். நீங்கள் வாருங்கள். உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உங்களின் பிம்பம் உடையும்.

விஜயும், அதிமுகவும் சேர்ந்தால் அது மிக நிச்சயமாக வெற்றிக்கூட்டணிதான். முதலமைச்சர் 100 சதவீதம் எடப்பாடி பழனிசாமி தான். அப்போது தான் அந்த கூட்டணி வரும். இல்லாவிட்டால் வராது. அப்போது எடப்பாடியை முதலமைச்சர் ஆக்க உழைக்கப் போகிறீர்கள் என்றால்? நான் ஏன் தவெக-வில் உறுப்பினர் ஆக வேண்டும். அதிமுகவிலேயே உறுப்பினர் ஆகி இருப்பேனே. அதிமுக கூட்டணிக்கு நான் வரத் தயார். ஆனால் பாஜக கூட்டணியில் இடம்பெறக் கூடாது என்று விஜய் சொன்னால் எடப்பாடி பாஜகவை கழற்றிவிடுவார். எப்படி சொல்வார் என்றால் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள். வராத ஆள் வருகிறார். வந்த பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று பாஜகவுக்கு புரிய வைத்தாவது விஜயை தக்கவைக்க முயற்சிப்பார். அந்த சூழலில் தான் எடப்பாடி பாஜகவை கழற்றிவிடுவார். மற்றபடி அவர் தன்னிச்சையாக அவர்களை கழற்றிவிட மாட்டார்.

ஓபிஎஸ்சுடன் இணைவதை தொண்டர்கள் எப்படி ஏற்று கொள்வார்கள்?டிடிவி தினகரன் பதில்

ஒரு கட்சி பிளந்தால், இணைவது என்பது இயல்பானது. அது காலத்தின் கட்டாயமாகும். இணைகிறபோது அது உங்களுக்கு புரியும். என்.டி.ஏவில் நாங்களும் இருக்கிறோம் என்று தினகரன், ஓபிஎஸ் சொல்கிறார்கள். அதை நயினார் நாகந்திரனும் ஒப்புக்கொள்கிறார். என்.டி.ஏ கூட்டணி எடப்பாடி தலைமையில் தான் உள்ளது என்று அமித்ஷா சொல்கிறார். அப்போது எடப்பாடியை முதலமைச்சராக ஏற்க தினகரனும், ஓபிஎஸ்-ம் சம்மதித்து விட்டார்கள். திமுக கூட்டணியின் தொடர் வெற்றிகளுக்கு கூட்டணி கட்சிகளும் காரணமாகும். அதனால்தான் முதலமைச்சர் கூட்டணி கட்சி விவகாரத்தில் மிகவும் எச்சரிக்கையாக செயல்படுகிறார். இன்றைய நிலைமையில் அதிமுகவுக்கு தான் நெருக்கடி உள்ளது. கூட்டணியில் யாரையாவது சேர்க்க வேண்டும் என்று நெருக்கடி உள்ளது. மெகா கூட்டணி என்று சொல்கிறார்கள். ஒரு வலுவான கூட்டணிக்கு பாமக-வாவது போய் சேரட்டும். இன்றைக்கு நிலைமைக்கு திமுகவுக்கு பாமக அவசியம் இல்லை. அவசியம் என்று நினைத்தாலும் இடம் அவர்களால் கொடுக்க முடியாது. காங்கிரஸ், இடதுசாரிகள், திருமாவளவன் என்று எல்லோரும் இடங்களை அதிகமாக கேட்பார்கள். பாமகவுக்கு தான் இடநெருக்கடி. தேமுதிகவுக்கு அப்படி இல்லை. அவர்களை கூட்டணி சேர்ப்பதில் எந்த் பிரச்சினையும் இல்லை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ