Homeசெய்திகள்கட்டுரைஅதிமுக + தவெக + பாமக + தேமுதிக! தனியாக கூட்டணி டீல் நடக்குது! ரகசியம்...

அதிமுக + தவெக + பாமக + தேமுதிக! தனியாக கூட்டணி டீல் நடக்குது! ரகசியம் உடைக்கும் ப்ரியன்!

-

- Advertisement -

பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஓபிஎஸ், தினகரன் போன்றவர்களுக்கு அதிமுக நிச்சயமாக இரட்டை இலை சின்னத்தை வழங்காது என்றும், அவர்கள் அரசியல் ரீதியாக வலுப்பெறுவதை எடப்பாடி விரும்ப மாட்டார் என்றும் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.

அதிமுக – பாஜக கூட்டணி தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ள கருத்து குறித்தும், அதன் பின்னணி குறித்தும் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- அதிமுக கூட்டணியில் பெருந்தன்மையோடு இணைவதற்கு தயாராக இருப்பதாக நேர்காணல் ஒன்றில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தினகரன், ஓபிஎஸ், சசிகலா போன்றவர்கள் அதிமுக ஒற்றுமைக்கு நீண்ட நாட்களாகவே வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எடப்பாடி தரப்பில் அதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.  அவர் ஓபிஎஸ்-ஐ கட்சியில் சேர்த்துக்கொள்ள மாட்டார். தினகரன் தனியாக கட்சி வைத்துள்ளதால் அவரை எடப்பாடி கூட்டணியில் ஏற்றுக்கொள்வார்.

அதேவேளையில் ஓபிஎஸ், சசிகலா ஆகியோரை ஏற்றுக்கொள்ள மாட்டார். ஒன்றுபட்ட அதிமுக, பாஜக கூட்டணி என்பதற்கு வாய்ப்புகளே கிடையாது. எடப்பாடி விரும்பவும் மாட்டார். அது நடக்கவும் நடக்காது. சசிகலா, ஓபிஎஸ் போன்றவர்களை அதிமுகவில் சேர்த்தால், அவர்களால், எடப்பாடியின் அதிமுக சாம்ராஜ்யம் என்பது வீழ்த்தப்படும். அவர்களை கட்சியில் சேர்த்தால் தலைமை பெறுப்புக்கு போட்டியாக வருவார்கள் என்று சேர்க்க மாட்டார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி சர்ச்சை நாயகனாக திகழ்வதாக அமமுக  பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

ஓபிஎஸ் தனது பலத்தை நிரூபிக்க வேண்டும் என்றால் எடப்பாடி உடன் அரசியல் ரீதியாக போரிட்டு, அவரை தேர்தல் மூலமாக வென்றால் தான் உண்டு. மற்றபடி தற்போதைய சூழலில் ஓபிஎஸ் அதிமுகவில் இணைவது சாத்தியமற்றது. அதேவேளையில் ஒபிஎஸ் என்.டி.ஏ கூட்டணியில் இருப்பாரா? என்றால் அதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் அப்படி ஒரு முடிவு எடுத்தால் அது கூட்டணியை தொடக்கத்திலேயே தோல்விக்கு தள்ளிவிடும். தற்போது அதிமுகவிடம் இருந்து பாஜக ஒட்டுமொத்தமாக இடங்களை வாங்கிக் கொண்டு, கூட்டணிக் கட்சிகளுக்கு சீட்டுகளை பிரித்துக்கொடுப்பதாக பேச்சுகள் அடிபடுகின்றன. ஆனால் அதற்கு எடப்பாடி ஒப்புக்கொள்ள மாட்டார்.

கூட்டணிக்கு கட்சிகளை சேர்க்க வேண்டியது பாஜகவின் வேலையாகும். ஆனால் இடங்களை கொடுப்பது எடப்பாடி ஆவார். ஓபிஎஸ், தினகரன் போன்றவர்களுக்கு எத்தனை இடங்கள் தருவது என்று எடப்பாடிதான் முடிவு செய்வார். ஆனால் அவர்கள் இரட்டை இலை சின்னம் கேட்கக்கூடாது. அவர்களை வெற்றி பெற வைக்க வேண்டியது பாஜகவின் வேலையாகும். இவற்றை எல்லாம் எடப்பாடி தனது நெருங்கிய வட்டாரத்தில் கூறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏனென்றால் அவர் பல்வேறு நீதிமன்ற வழக்குகளை எதிர்கொண்டு, தேர்தல் ஆணையத்தோடு முட்டி மோதி, பாஜக உடன் விட்டுக் கொடுத்து சென்று ஒருவிதமாக கட்சியை தற்போதுதான் செட் செய்திருக்கிறார். ஓபிஎஸ், தினகரன் போன்றவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தை கொடுத்தால் அவர்கள் நாளைக்கு தாங்கள் அதிமுகவினர் என்று க்ளைம் செய்வார்கள். அவர்களை அதிமுகவினர் என்று அங்கீகரிக்கும் விஷயமாக அது அமைந்துவிடும். அதை எடப்பாடி ஒப்புக்கொள்ள மாட்டார். இந்த யுத்தத்தை நடத்த வேண்டியது ஓபிஎஸ். அவர் பழம் கனிந்து தானாக மடியில் விழும் என்று நினைக்கிறார்.

பாஜக எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளும் என்று ஓபிஎஸ் நினைக்கிறார். அதை போன்ற ஒரு முட்டாள்தனம் எதுவும் இல்லை.  பாஜகவை பொருத்தவரை அதிமுக அமைப்பு ரீதியாக ஒரு கட்சியாக உள்ளது. அதன் தலைமை பொறுப்பில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். அது வெற்றி பெறுமா? செல்வாக்கு உள்ளதா? என்பதெல்லாம் அடுத்த கேள்வி. அமித்ஷா, ஓபிஎஸ், தினகரன் போன்றவர்களை கட்சியில் இணைப்பது அதிமுகவின் உட்கட்சி விவகாரம் என்று சொல்லிவிட்டார். எனவே அவர்கள் பாஜகவின் தயவில்தான் இருக்க வேண்டும். பாஜகவுக்கு ஒதுக்கப்படும் இடங்களில், அவர்களுக்கு சீட் ஒதுக்கி கொடுத்தால் தான் உண்டு.

OPS

திமுக மோசமான ஆட்சி நடத்துவதாகவும், தாங்கள் கசப்புகளை எல்லாம் மறந்து திமுகவுக்கு எதிராக நிற்பதாகவும் டிடிவி தினகரன் சொல்லியுள்ளார். திமுக அரசுக்கு எதிரான மனநிலை உள்ளது உண்மைதான். ஆனால் தினகரன், நயினார் போன்றவர்கள் கட்டமைப்பதை போன்று அவ்வளவு மோசமாக நிலையில் இல்லை. புலிக்கு பயந்தவர்கள் எல்லாம் என் முதுகின் மீது வந்து படுத்துக்கொள்ளுங்கள் என்பதை போல திமுகவை எதிர்ப்பவர்கள் எல்லாம் தங்களிடம் வாங்க என்று சொல்கிறார்கள். நயினாருக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லையா?

பாஜகவை கொள்கை எதிரி என்று அறிவித்தவர் விஜய். அந்த தவெகவை பார்த்து கூட்டணிக்கு வாங்க வாங்க என்கிறார். திமுகவுக்கு எதிராக அந்த அளவுக்கு அதிருப்தி உள்ளது என்றால், மக்கள் உங்களுக்கு வாக்களிக்க மாட்டார்களா? எதற்கு தவெகவை துணைக்கு கூப்பிடுகிறார். கடந்த காலங்களில் தினகரன், பாஜகவை எதிர்த்து சிறைக்கு சென்றது தெரியும். அரசியலில் துரோகத்தை முறியடிக்க வேண்டிய திட்டங்களை வகுக்க வேண்டிய ஒபிஎஸ், தினகரன் ஆகியோர் பாஜகவை நம்பி தங்களது அரசியலை வகுத்துக்கொள்கிறார்கள். அது முட்டாள்த்தனமானது.

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையத்தில் பாஜக அரசியல் செய்து ஒபிஎஸ், தினகரனுக்கு சின்னம் வழங்கினால்தான் உண்டு. அப்படி மிரட்டி இருவருக்கும் சின்னம் கொடுக்கும்பட்சத்தில் எடப்பாடிக்கு பிரச்சினை தொடங்கிவிடும். அப்படி ஓபிஎஸ், தினகரனுக்கு சீட் கொடுத்தாலும் அவர்களை தோற்கடிப்பதற்கான வேலைகளை செய்வார்கள். அவர்கள் எந்தவிதத்திலும் அரசியல் ரீதியாக முன்னுக்கு வரக்கூடாது என்பதில் எடப்பாடி உறுதியாக உள்ளார். நாளைக்கு சிவில் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று தீர்ப்பு வந்தாலும், அப்போதும் அதை எதிர்த்து வழக்கு தொடருவார். அதனால் ஓபிஎஸ்க்கு அதிமுகவில் எந்த இடமும் கிடைக்காது. அவர் சுயேட்சை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும். அதேவேளையில் தினகரன் வேண்டிய சின்னத்தை வாங்கி போட்டியிடுவார்.

நாளை தவேகவின் முதல் பொதுக்குழு கூட்டம் – நிர்வாகிகளுடன் தலைவர் உரை

அதிமுகவை பொருத்தவரை இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கிற்காக பொருத்துப் போய் கொண்டிருக்கிறார்கள். 10 மாதத்திற்கு முன்னதாக பாஜகவுடன் கூட்டணி அமைத்தது என்பது ஜெல் ஆவதற்காக அல்ல. உறவினர்களின் வீடுகளில் சோதனை என்று எடப்பாடிக்கு பல நிர்பந்தங்கள் இருந்தன. அதனால் அவர் பாஜக கூட்டணிக்கு செல்ல வேண்டி வந்தது. சின்னத்தை வாங்குவதற்காக தான் அவர்கள் பொறுமையாக காத்திருக்கிறார்கள். பாஜக பிரச்சினை செய்வது என்று முடிவு எடுத்துவிட்டார்கள் என்றால், ஏதோ ஒரு வகையில் பிரச்சினை ஏற்படுத்துவார்கள்.

அதேவேளையில் அதிமுகவை, தினகரனுக்கோ, ஓபிஎஸ்க்கோ பாஜக கொடுத்தார்கள் என்றால் எடப்பாடி அதையே சாக்காக வைத்துக்கொண்டு தவெக கூட்டணிக்கு சென்றவிடுவார். அதிமுக, தவெக, பாமக, தேமுதிக என்று ஒரு கூட்டணிக்காக மறைவாக முயற்சித்து வருகின்றனர். அதை ஏற்படுத்தி விடுவார்கள். தினகரன் சொல்வது போல அதிமுகதான் பாஜக கூட்டணிக்கு வந்துள்ளது. ஆனால் விலகி வந்து சேர்ந்துள்ள அதிமுகவை தான் முதன்மை கட்சியாக அமித்ஷா அறிவித்துள்ளார். அதனால் சீட் ஒதுக்கீடு, ஓபிஎஸ் – தினகரனுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வது போன்ற விவகாரத்தில் பிரச்சினை ஏற்பட்டால் அதிமுக வேறு ஒரு வாய்ப்பை எடுக்கவும் வாய்ப்புள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ