தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது டெல்லி தலைமைக்கு நம்பிக்கை குறைந்து விட்டதாகவும், இருந்தபோதும் 2026 வரை அவரை மாற்றும் வாய்ப்புகள் இல்லை என்றும் மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் இடையிலான மோதல் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், டெல்லி சென்று அக்கட்சியின் தலைவர் நட்டாவை சந்திக்க உள்ளதாகவும், மாநில தலைவர்களை மாற்ற உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் பாஜகவில் நட்டா என்பவர் அதிகாரம் இல்லாத ஓரு தலைவர் ஆவார். அதற்கு பதிலாக அமித்ஷா, மோடியை சந்தித்தீர்கள் என்றால் அண்ணாமலையை மாற்ற முடியும். அப்படி இல்லாவிட்டடால் தமிழ்நாட்டில் அண்ணாமலையை மாற்ற முடியாது. குறிப்பாக பிரதமர் மோடி நினைக்காமல் அண்ணாமலையை ஒன்றும் செய்துவிட முடியாது. அண்ணாமலை, சாட்டையடி போராட்டம் உள்ளிட்ட என்ன கோமாளித்தனம் செய்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. அண்ணாமலையின் சவுக்கடி போராட்டத்திற்கே டெல்லியில் பெரிய அளவில் ரியாக்ஷன் இல்லை.
டெல்லியில் அண்ணாமலை மீது பெரிய இமேஜ் உள்ளது. கோவை மக்களவை தொகுதியில் அண்ணாமலை போட்டியிட்டபோது, அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க கட்சியின் மூத்த தலைவர்கள் நிறைய பேர் வந்தார்கள். அண்ணாமலைக்கு அனைத்து ஆங்கில ஊடகங்களும் பெரிய அளவில் பிரபகாண்டா செய்தன. ஆனால் கோவை மக்கள் நடுநிலையாளர்களின் பக்கம் நின்று முடிவுகளை எடுத்தனர். டெல்லியில் இருந்து நீங்கள் என்னதான் கத்தினாலும், தமிழ்நாட்டில் மாற்றத்தை கொண்டு வர முடியாது. அண்ணாமலை தோல்வி அடைந்ததை கண்டு எல்லாரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் கோவையில் நீங்கள் யாரிடம் பேசினீர்கள். சிங்கையிடம் பேசினீர்களா. கேவையில் துணை மேயராக இருந்த ராஜ்குமாரிடம் பேசினீர்களா. அப்படி பேசி இருந்தீர்கள் என்றால் உண்மை நிலவரம் தெரிய வந்திருக்கும்.
கோவையில் உள்ள தொழிலதிபர்கள் எல்லாம் அண்ணாமலை வெல்லுவார் என நம்பிக் கொண்டிருந்தனர். அவரது சமூகத்தினரும் கூட சிங்கைக்கு வாக்களிக்காமல் அண்ணாமலைக்கு ஓட்டு போட்டுள்ளனர். அப்படி இருந்தும் தேர்தலில் அண்ணாமலை தோல்வியுற்றார். அதன் பிறகு டெல்லியில் அவரது இமேஜ் பாதிக்கப்பட்டது. அதன் பிறகு லண்டன் சென்றுவிட்டார். இதனால் அண்ணாமலையை தமிழ்நாட்டில் உள்ள மக்கள் மறந்தே விட்டனர். அண்ணாமலை பழைய நிலைக்கு வர வேண்டும் என்றால் இன்னும் ஒரு வருஷம் வேண்டும். ஆனால் மத்தியில உள்ள தலைமையான அமித்ஷா, மோடி என்ன நினைக்கின்றனர் என்றால், அண்ணாமலையை நாம்தான் தேர்ந்தெடுத்தோம். என்னதான் ஆனாலும் அண்ணாமலையை ஆதரிக்க வேண்டும் என நினைக்கின்றனர். அமித்ஷாவின் கேரக்டர் அது. காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகளில் நிர்வாகி குறித்து புகார் வந்தால் அவர் மீது நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால் அமித்ஷா அவ்வாறு செய்ய மாட்டார்.
தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலையை நீக்கிட்டு, அந்த இடத்தில் ஒரு பிராமணரை போட முடியாது. திருப்பதி நாராயணனோ, கே.டி.ராகவன் போன்றோரை தலைவராக போட முடியாது. ஏனினெனில் அந்த சமூகம் குறித்து மக்களிடையே அந்த அளவிற்கு எதிர்மறையான கருத்துக்கள் வந்துள்ளது. தமிழிசை சௌந்தரராஜனை பொருத்தவரை, துணை நிலை ஆளுநராகவும், ஆளுநராகவும் மிக மிக மோசமான ஆட்சியாளராக இருந்தார். அவர் பாஜகவுக்கும் நல்லது செய்யவில்லை, அந்த மக்களுக்கும் நல்லது செய்யவில்லை. இன்றைய நிலையில் தமிழக பாஜக தலைவர் பொறுப்புக்கு, கட்சி தலைமை யாரையும் விரும்பவில்லை. என்னை பொருத்தவரை நயினார் நாகேந்திரன் தான் அந்த பொறுப்புக்கு சரியான நபர் ஆவார். ஆனால் பாஜக தலைமைக்கு அவர் மீத விருப்பம் இல்லை. அவர் ஓரளவுக்கு கட்சியை கொண்டுவருவார் என நம்புகிறேன். தேர்தலில் வெற்றி பெறுவது எப்படி என அறிந்தவர் அவர். ஆனால் தமிழிசை, நயினார் நாகேந்திரன் ஆகிய இருவருக்கும் தமிழக பாஜக தலைவர் ஆகுவதற்கான வாய்ப்பு இல்லாததால் அண்ணாமலைக்கு மாற்றே இல்லை. அவருக்கு 2026ஆம் ஆண்டு மே மாதம் வரை பிரச்சினை இல்லை. சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் தான் அவருக்கு பிரச்சினை வரும். தமிழக பாஜகவின் மற்றொரு தலைவரான வானதி சீனிவாசனுக்கும் இந்த வாய்ப்பு இல்லை. அமித்ஷா, மோடிக்கு பெண் தலைவர்கள் நியமிப்பதில் உடன்பாடு இல்லை. ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்து வந்தால் பெண்களை சற்று வலுக் குறைந்தவர்களாகவே கருதுகின்றனர். பாஜக தலைமையில் உள்ளவர்கள், பெண் தலைவர்களுடன் பணிபுரிவதில் கம்பர்டபுள் இல்லை என கருதுகின்றனர். பிரச்சினைகளை யோகி ஆதித்யநாத், எடியூரப்பா, எடியூரப்பா மகன் எல்லாரிடமும் அமர்ந்து பேசுகின்றனர். ஆனால் பெண் தலைவர்கள் நியமிப்பதில் விருப்பம் இல்லை.
தற்போதைய மோடி தலைமையிலான பாஜக, ஆட்சிக்கு வருவதற்காக என்ன வேண்டும் என்றாலும் செய்வார்கள். அண்மையில் நடைபெற்ற மகாராஷ்டிரா, ஹரியானா சட்டமன்ற தேர்தலில் பாஜக முறைகேட்டில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன. அதனால் பாஜக தலைமையை பொறுத்தவரை வெற்றிபெற வழி என்ன? யாரை கொண்டுவர வேண்டும். என்ன செய்ய வேண்டும். அந்த கோளவிக்கு பதில் அளித்துவிட்டால் போதும். நயினார் எல்லாம் ஒரு பொருட்டே கிடையாது. நயினார் வந்தால் 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு 10 எம்எல்ஏ வருவார்கள் என்பதை உறுதிசெய்தால் நாளையே நயினார் நாகேந்திரனை கொண்டுவந்து உட்கார வைத்துவிடுவார்கள். ஆனால் இதை யாராவது உறுதி செய்ய முடியுமா என்பது தான் கேள்வி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.