வக்பு வாரிய சட்டத்திற்கு ஆதரவு அளித்ததால் நிதிஷ் குமார் கட்சியில் இருந்து 2 எம்.பிக்கள் விலகியது தொடக்கம் தான் என்றும், அடுத்த ஆப்பு சந்திரபாபு நாயுடுவுக்கு தான் என்றும் பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்.

வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு ஆரவாக நிதிஷ்குமார் வாக்களித்ததால், அவருடைய கட்சியில் இருந்து 2 எம்.பிக்கள் ராஜினாமாக செய்துள்ளனர். இதன் முழுமையான பின்னணி குறித்து பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:- வக்பு வாரிய மசோதாவை வெற்றிகரமாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி விட்டோம் என்று பாஜகவினர் கொண்டாடலாம். ஆனால் அனைத்து விஷயங்களும் சட்டத்தின் அடிப்படையில், அறத்தின் அடிப்படையில்தான் பார்க்கப்படும். எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதன் தொடர்ச்சியாக வக்பு மசோதாவுக்கு ஆரவாக வாக்களித்த நிதிஷ் குமார் கட்சியை சேர்ந்த 2 எம்.பிக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்கள். இது நிதிஷுக்கு நேரடியான ஆப்பாகும். ஏனென்றால் பீகாரில் இஸ்லாமியர்களின் வாக்குகளை வாங்கி வெற்றி பெற்ற கட்சியாகும். ஆனால் முஸ்லிகளுக்கு விரோதமான சட்டங்களுக்கு அவர் ஆதரவு அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து 2 பேர் கட்சியில் இருந்து வெளியேறி இருக்கிறார்கள். இது ஒரு தொடக்கம் தான்.
தொகுதி மறுவரையறை விவகாரத்திலேயே சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் ஆகியோர் கொஞ்சம் ஆடிப் போய் உள்ளனர். அவர்கள் நல்லவர்கள் இல்லைதான். தங்களின் சுய நலத்திற்காக தெலுங்கு மக்களையே அடகு வைப்பவர்கள்தான். பாஜகவுக்கு அதிகாரத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் நிலையில் தான் சந்திரபாபு நாயுடு உள்ளார். அவர் பெரிய தலைவராக இருந்தபோதும், முழுமையாக மோடி – அமித்ஷாவிடம் சரணடைந்துவிட்டார். பவன் கல்யாண் ஒரு சங்கியாகவே மாறினார். தொகுதி மறுவரையறை, மாநிலத்திற்கான நிதி பகிர்வு உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசிடம் பணிந்து செல்வது அவர்களது மாநிலத்திற்கு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். இவர்கள் தங்களை தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கிறார்கள். ஆனால் கட்சி கரைய போகிறது. பாஜகவின் ஸ்டையிலே அவர்களுடன் நீண்ட காலம் கூட்டணியில் இருந்தால் கட்சி கரைந்துவிடும். இதற்கு உதாரணம் சிவசேனா. உத்தவ் தாக்கரே, இந்த மசோதா இந்துக்களுக்கும் எதிரானது என்கிறார்.

இவர்களுடைய நோக்கம் தர்கா, பள்ளிவாசல்களின் நிலங்களை குறிவைக்கிறார்கள். பாஜக என்பது சிறுபான்மை மக்களை பழிவாங்கி இந்துக்களுக்கு அள்ளித் தர போகிறது என்று நினைக்காதீர்கள். அப்பாவி மக்களுடைய சொத்துக்களை கொள்ளை அடித்து அதானிக்கும், அம்பானிக்கும் கொடுக்க போகிறார்கள். தங்களுடைய பணக்கார நண்பர்களுக்கு கொடுக்கத்தான் பாஜக அனைத்து சட்டங்களையும் கொண்டு வருகிறது. அதனால் இதை முஸ்லிம் விரோதம் என்று சுருக்கி விடாதீர்கள். பாஜக பொருளாதார சூறையாடலை நடத்தி வருவதாக உத்தவ் தாக்கரே எச்சரிக்கிறார். இந்த வரிசையில் அடுத்து சந்திரபாபு நாயுடுதான். சுதாரித்துக் கொண்ட உத்தவ் தாக்கரே இன்றும் மரியாதையுடன் இருக்கின்றனர்.
திமுக அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், கைரேகை சட்டத்தை எதிர்த்து போராடியவர்களை சுட்டுக்கொன்ற வழக்கில், வழக்காடி போராடியவர் எங்கள் தாத்தா பி.டி.ராஜன் தான் என்று சொல்லியிருக்கிறார். தமிழ்நாடு மத்திய அரசை எதிர்த்து போராடி கொண்டிருக்கும் இந்த சூழலில் மிகவும் முக்கியமான பதிவை பிடிஆர் போட்டிருக்கிறார். தென்னகத்தின் ஜாலியன்வாலாபாக் எனப்படுகிற பெருங்காமநல்லூர் சம்பவம் நடைபெற்று 100 ஆண்டுகள் ஆகிறது. அப்பாவி மக்கள் மீதான துப்பாக்கிச் சூட்டிற்கு நீதி கேட்டு வாதாடிய என் தாத்தா தாத்தா பி.டி.ராஜன், அதற்கு வழிகோழிய ரோசாப்பு துரையையும் நன்றியோடு நினைவு கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார். அன்றைக்கு உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லுரில் 68 சமூகங்களை சேர்ந்தவர்கள் பிறந்தாலே குற்றவாளிகள் தான் என்ற நிலை இருந்தது. காவல் நிலையத்தில் சென்று நாள்தோறும் கைரேகை இட வேண்டிய கட்டாயம் இருந்தது. இவற்றை எல்லாம் எதிர்த்து போராடிய வரலாறு அந்த மண்ணுக்கு உள்ளது. அந்த நிகழ்வுக்கும் சுய மரியாதை இயக்கத்திற்கும், நீதிக்கட்சிக்கும் உள்ள தொடர்புகளை பிடிஆர் பேசியுள்ளார்.
சங்கிகள், வலதுசாரிகள் அனைத்து சமூகத்தினரிடமும் செல்கிறார்கள். அவர்களிடம் ஆண்ட பரம்பரை என்று குலப் பெருமைகளை சொல்லி கொண்டிருக்கிறார்கள். ஆனால் திராவிட இயக்கம் அப்படி சொல்லாது. அவர்கள் கையில் வெட்டரிவாள், வேல்கம்புகளை கொடுக்காது. அது பெருமை இல்லை நீங்கள் படியுங்கள். உங்களை படிக்கவிடாமல் பிரிட்டிஷ் காலத்தில் அடக்குமுறை சட்டம் இருந்தது. ஆனால் நீங்கள் படிக்க வேண்டும். அதற்கு உனக்கு இடஒதுக்கீடு வேண்டும். என்ன என்ன உரிமைகள் வேண்டும். பள்ளி – கல்லூரிகள் கட்டுவோம் என்று அவர்கள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவது தான் திராவிட இயக்கத்திற்கும், சங் பரிவார் இயக்கத்திற்கும் உள்ள வித்தியாசமாகும். சங் பரிபவார் சாதியத்தை ஊக்குவிக்கும். ஆனால் பிடிஆர் அந்த சமுதாயத்தின் வரலாறை சொல்லி, உன்னை இப்படி அடக்க முயன்றார்கள். அன்றைக்கு வழக்கு தொடர்ந்தது. என்னுடைய தாத்தா போராடினார் என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சொல்கிறார்.
இன்றைக்கு வக்பு மசோதாவை எடுத்துக்கொண்டோம் என்றால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து எம்.பி.க்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சட்டமன்றத்தில் கருப்பு பட்டை அணிந்திருந்தார்கள். சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தார்கள். இதுபோக வக்பு சட்டத்திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்துள்ளார்கள். ஒரு அரசு இந்தியா முழுமைக்குமாக கொண்டுவரப்படும் சட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் போராடுகிறது. சட்டமன்றத்தில் போராடுகிறது. நாடாளுமன்றத்தில் போராடுகிறது. இது தவிர தனது அரசியல் எதிர்ப்பை காண்பிக்க கருப்பு பட்டை அணிந்து வெளியே வருகிறது. என்றால் இது தான் தமிழ்நாடு, இதுதான் தமிழர்கள், இதுதான் நீதிக்கட்சி சுயமரியாதை இயக்கத்தின் பாரம்பரியமாகும். எதன் அடிப்படையில் ஒருவர் ஒடுக்கப்பட்டாலும் அதற்காக நிற்பது. அது மொழியாக இருக்கலாம், சாதிய வன்முறையாகவோ, பாலின வன்முறையாகவோ இருக்கலாம். அதற்காக நிற்பதுதான் தமிழ்நாடு, தமிழ்நாடு அரசாகும். அதைதான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும். பிடிஆர் போட்ட டிவிட், உத்தவ் தாக்கரே விடுத்த எச்சரிக்கையை பார்த்து நாயுடுவும், நிதிஷும் இனிமேலாவது திருந்த வேண்டும் ஏற்கனவே ஆப்பு இறங்கிவிட்டது. நாயுடு அடுத்து நீங்கள்தான், இவ்வாறு அவர் தெரிவித்தார்.