Homeசெய்திகள்கட்டுரைஸ்டாலின் விட்ட சவால்! ஆப்ஷனை ஓபன் பண்ணிய மோடி!

ஸ்டாலின் விட்ட சவால்! ஆப்ஷனை ஓபன் பண்ணிய மோடி!

-

- Advertisement -

பாஜக உடன் கூட்டணி அமைத்தால் தான் அதிமுகவுக்கு கூடுதல் லாபம் என்பதால் தான் எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்துள்ளார் என்று அரசியல் திறனாய்வாளர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையின் தற்போதைய நிலை குறித்தும், பாஜக மாநில தலைவர் மாற்றம் தொடர்பாகவும் அரசியல் திறனாய்வாளர் ரவீந்திரன் துரைசாமி யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்கணாலில் கூறி இருப்பதாவது:- பாஜக மாநிலத் தலைவர் போட்டியில் நான் இல்லை என்று அண்ணாமலை செய்தியாளர்களிடம் சொல்கிறார். போட்டியில் இல்லை என்றுதான் சொல்கிறார். தவிர நீங்கள் தான் இந்த கட்சியை வளர்த்தவர். நீங்கள் தான் தொடர வேண்டும் என்று எல்லோரும் சொன்னால் அவர் ஏற்றுக்கொள்வார். தெளிவாக சொல்கிறார். தலைவர் பதவி தேர்வு செய்யப்பட்டதும் நான் செய்தியாளர்களை சந்திப்பேன் என்று. தேர்வு செய்யப்பட்ட தலைவர்தான் செய்தியாளர்களை சந்திப்பார்கள். அவர் தன்னை தான் தலைவராக தேர்வு செய்வார்கள் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார். அந்த நம்பிக்கை எந்த அளவுக்கு ஊர்ஜிதமாகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். இந்த நகர்வை செய்தவர் எடப்பாடி பழனிசாமி. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று சொல்லி வந்த எடப்பாடி பழனிசாமி, அரசியல் சூழ்நிலையில் பாஜக கூட்டணி அமைப்பது தான் தங்களுக்கு கூடுதல் லாபம் என்று முடிவு செய்துள்ளார்.

அண்ணாமலை

எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை சந்திக்க போகும்போது, பிரேமலதா திமுகவுக்கான கூட்டணி கதவை திறந்து விட்டார். எடப்பாடி பழனிசாமி அருந்ததியர் உள் ஒதுக்கீடு விவகாரத்தில் ஜெயலலிதாவின் முடிவில் இருந்து மாறி விட்டதால் கிருஷ்ணசாமியும் அவரிடம் இருந்து விலகிவிட்டார். பின்னர் விஜயுடன் கூட்டணி பேச்சுவார்த்தை என்றும், விஜய்க்கு 80, 90 சீட்டுகள் என்றும் பேசப்பட்டது. 45 சீட்டுகள் பெற நாங்கள் கட்சி தொடங்கவில்லை என்று ஆதவ் அர்ஜுனாவே பேசினார். எடப்பாடிதான் 45 சீட் கொடுக்கப் போகிறார் என்றும் தகவல் வந்தது. விக்கிரவாண்டியில் பாமக வாக்கு வங்கி உயர்ந்ததால் ராமதாஸ் ராஜ்யசபா உடன், 35 – 40 இடங்கள் கேட்பார் என்று சொன்னேன். அடுத்து  செங்கோட்டையனை பாஜக கையில் எடுத்து அரசியல் செய்தது. அண்ணாமலை தேசிய ஜனநாயக கூட்டணி பலமுடன் உள்ளது என்று சொன்னார்.

எடப்பாடி அமித்ஷாவை பார்த்ததன் மூலம் விஜய் குறித்து வந்த செய்திகள் எல்லாம் தவறானவை என்று உடைத்துவிட்டார். அடுத்து அணணாமலை, செங்கோட்டையனுக்கு செக் வைத்துவிட்டார். என்டிஏ கூட்டணியில் இணைந்ததன் மூலம், கிருஷ்ணசாமிக்கும் செக் வைத்துவிட்டார். இதில் திமுக கூட்டணியை உடைப்பேன் என்று சொல்லியதில் தோல்வி அடைந்ததை மறைமுகமாக அவர் ஒப்புக்கொண்டு விட்டார். திமுக கூட்டணியில் பிரச்சினை உள்ளது. விசிக, காங்கிரஸ் என மெகா கூட்டணி அமைப்பேன் என்று எடப்பாடி சொல்லி வந்தார். ஆனால் எல்லோரும் அரசியல் லாபத்திற்காக தான் அரசியல் செய்கிறார்கள். திமுக கொடுப்பது எம்.பி., எம்.எல்.ஏ போஸ்ட்டுகளாகும். வெற்றி தொடரும் வரை திமுக கூட்டணி தொடரும் என்று நான் சொன்னேன். பாஜக எதிர்ப்பு போன்றவற்றை அவர்கள் பார்க்கவில்லை. அவர்கள் திமுக கூட்டணியில் தொடர்கிறார்கள். மேலும் தொடருவார்கள். அப்போது, இந்தியா கூட்டணியை உடைத்து என்பது நடக்காது என்று புரிந்து கொண்டு பாஜக கூட்டணிக்கு சென்றிருக்கிறார். அண்ணாமலை இருக்கும் வரை பாஜக, அதிமுகவுடன் கூட்டணிக்கு வராது சொன்னேன். ஆனால் அண்ணாமலை மீண்டும் பாஜக தலைவராக வந்தால், அதிமுக நிலை என்ன ஆகும்?.

அண்ணாமலை மீண்டும் பாஜக தலைவராக தொடருவதற்கு 90 சதவீத வாய்ப்புகள் உள்ளது என்றுதான் தெரிய வருகிறது. அவர் பேசுவதும் அந்த அடிப்படையில் தான். எடப்பாடியுடன் கூட்டணி பேசிக் கொண்டே, செங்கோட்டையனை அழைத்து பாஜகவினர் பேசுகின்றனர். அந்த நிலையில் தான் அவர்கள் அதிமுகவை நினைக்கின்றனர். அண்ணாமலையை பொருத்தவரை கட்சிக்கு பெரிய பலமாக உள்ளார். பாஜக கூட்டணியை 9 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தி இருக்கின்றார். அண்ணாமலையை பெரும்பாலும் மாற்றம் செய்வற்கு வாய்ப்பு இல்லை. ஆனால் தேசிய கட்சியில் மாற்றவே மாட்டார்கள் என்று உறுதியாக சொல்லிவிட முடியாது. அதிமுக – பாஜக கூட்டணி அமைந்தால் முழுமையாக 38 சவீதம் வாக்குகள் கிடைக்காது. பிற கட்சிகளுக்கு 8 சதவீதம் வரை செல்ல வாய்ப்பு உள்ளது. தமிழக பாஜகவிலேயே அண்ணாமலைக்கு எதிராக பெரிய லாபி உள்ளது. எனவே பாஜகவில் என்ன மாற்றம் வருகிறது என்பதை அருதியிட்டு சொல்லிவிட முடியாது.

நீட் தேர்வுக்கு ஒரே மாதத்தில் 4-வது உயிர் பலி - மாணவா்களை காக்க அரசின்ச நடவடிக்கைகள் என்ன? ராமதாஸ் கேள்வி

சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணிக்கான வாய்ப்புகளை எடப்பாடி பழனிசாமி திறந்து விட்டார். ஆனால் இன்னும் அவர் கூட்டணி உறுதிபடுத்த வில்லை. ஆனால் தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் இறுதியாகததால் அவர் இன்னும் கூட்டணியை உறுதிபடுத்தவில்லை. அதன் காரணமாகவே வக்பு வாரிய மசோதாவை எதிர்த்து அதிமுக வாக்களித்துள்ளது. அதிமுகவை 15 சதவீத வாக்குகளுக்குள் கட்டுப்படுத்திவிட முடியும் என்றும் நம்புகிறேன். அதேவேளையில் ஆர்.பி. உதயகுமார், இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வீடியோ வெளியிடுகிறார். கூட்டணியை உறுதி படுத்தாமல் எடப்பாடி இழுத்துக் கொண்டே தான் செல்வார். அவரை 15 சதவீத வாக்குகளுக்குள் கட்டுப்படுத்த வேண்டும். அப்போதுதான், 2029ல் மோடிக்கு 25 தொகுதிகள் கிடைக்கும். அதற்கு 2026 சட்டமன்ற தேர்தலை பயன்படுத்த வேண்டும் என்று சொல்கிறாம். ஒருவேளை அதிமுக – பாஜக கூட்டணி அமையாவிட்டால், பாமக அதிக தொகுதிகளை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். மருத்துவர் ராமதாஸ் அதிமுக கூட்டணிக்கு செல்ல விரும்புகிறாரா? என்பது அடுத்த விஷயம். ஆனால் அவர்கள் பாஜக கூட்டணியை காண்பித்து தான் அதிமுகவிடம் சீட்டு பேரம் பேசுவார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ