ஆவடி, அம்பத்தூர் சுற்று வட்டாரங்களில் உள்ள கடைகளில் ஷட்டரை உடைத்து கும்பலை கண்டுப் பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் டைமன்ராஜா வெள்ளையன் புகார் அளித்துள்ளார்.
அம்பத்தூர் திருவேற்காடு பிரதான சாலை அம்பத்தூர் மேற்கு எம்ஜிஆர் புரம் மற்றும் அயப்பாக்கத்தில் நள்ளிரவில் கடைகளின் ஷட்டரை உடைத்து ஒரு கும்பல் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருகிறது.

ஆவடி காவல் ஆணையரகம் அம்பத்தூர் தொழிற்பேட்டை, திருமுல்லைவாயில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட 51 எம் ஜி ஆர் புறம் மற்றும் அயப்பாக்கம் பிரதான சாலையில் லென்ஸ் கார்ட் கண்ணாடி கடை, மருந்தகத்தில் புகுந்த மர்ம நபர் கடையின் ஷட்டரை உடைத்து மருந்து கடையின் கல்லாப் பெட்டியிலிருந்து 30000 ரொக்க பணம் மற்றும் 35000 மதிப்புள்ள உயர் ரக செல்போன் ஆகியவற்றை திருடி சென்றது கடையின் முன்னே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
மேலும் டியோ இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தபடி வரும் மர்மநபர் ஒருவர் ஒன்றுக்கு மூன்று முறை நோட்டமிட்டபடி இருசக்கர வாகனத்தில் வந்து ஒருமுறை பூட்டை பார்த்துவிட்டு மறுமுறை இரும்பு ராடால் பூட்டை உடைத்தும் மீண்டும் ஒருமுறை வந்து கடையை திறக்க முயன்ற சிசிடிவி காட்சி பதிவுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புழல் மத்திய சிறையில் கூடுதல் சிறை கண்காணிப்பாளருக்கு கொலை மிரட்டல்…!
மேலும் பாஜக பிரமுகரான செல்வகுமார் என்பவரது மருந்து கடைக்குள் சென்று கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ள மர்ம நபர் குறித்து இரண்டு காவல் நிலைய தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள 50க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை தொடர்ந்து ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் டைமன்ராஜா வெள்ளையன் திருமுல்லைவாயல், அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.