மூன்று புதிய மின்சார ரயில்கள் தொடக்கம் !
சென்னை சென்ட்ரல் திருவள்ளூர் ஆவடி இடையே இன்று (செப்.9) மூன்று புதிய மின்சார ரயில் சேவைகள் தொடங்கப்படுகிறது. ஆவடியிலிருந்து காலை 9 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கும் சென்ட்ரலில் இருந்து காலை 10:40 மணிக்கு திருவள்ளூருக்கும் மரு மார்க்கமாக திருவள்ளூரில் இருந்து பிற்பகல் 3.50 மணிக்கு சென்ட்ரலுக்கும் என மூன்று புதிய மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது
சென்னை புறநகரில் 3 மின்சார ரயில் சேவை இன்று (செப்.9) முதல் தொடங்கப்படுகிறது. இதுபோல, 5 மின்சார ரயில்கள் நீட்டித்து இயக்கப்படுகின்றன.

சென்னை சென்ட்ரல் – திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி மற்றும் சென்னை கடற்கரை- தாம்பரம் – செங்கல்பட்டு ஆகிய வழித்தடங்களில் தினசரி 600-க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இத்தடங்களில் தினசரி 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர்.
பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கூடுதல் மின்சாரரயில்களை இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டதை பரிசீலித்த ரயில்வே நிர்வாகம், புதிதாக 3 மின்சார ரயில் சேவையைதொடங்கவும், 5 மின்சார ரயில்களின் சேவையை நீட்டிக்கவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, சென்னை சென்ட்ரல் திருவள்ளூர் ஆவடி இடையே இன்று (செப்.9) 3 புதிய மின்சார ரயில் சேவைகள் தொடங்கப்படுகிறது. ஆவடியில் இருந்து காலை 9.50 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கும், சென்ட்ரலில் இருந்து காலை 10.40 மணிக்கு திருவள்ளூருக்கும், மறு மார்க்கமாக திருவள்ளூரில் இருந்து பிற்பகல் 3.50 மணிக்கு சென்ட்ரலுக்கும் என 3 புதிய மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது.
சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டிக்கு நண்பகல் 12.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், சூலூர்பேட்டை வரை நீட்டித்து இயக்கப்படும். கூடுவாஞ்சேரி – தாம்பரத்துக்கு இரவு 8.55, 10.10, 10.25, 11.20 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், கடற்கரை வரை நீட்டித்து இயக்கபடும்.
இதுதவிர, சென்ட்ரல் – அரக்கோணம், கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் 28 ரயில்களின் நேரத்தில் 5 நிமிடம் முதல் 30 நிமிடங்கள் வரையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நேர மாற்றம் இன்றுமுதல் அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது