ஜாதி மதம் பாராது வந்தோரை எல்லாம் வாழவைக்கும் சென்னை- அண்ணாமலை
சென்னை மாநகரம், ஜாதி மதம் பாராது வந்தோரை எல்லாம் வாழவைக்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழகத்தின் தலைநகரமான சென்னை மாநகரை அமைப்பதற்காக இடம் வாங்கப்பட்ட தினமான, ஆகஸ்ட் மாதம் 22ஆம் நாளான இன்று, #MadrasDay எனச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சென்னை மாநகரம், ஜாதி மதம் பாராது வந்தோரை எல்லாம் வாழவைக்கும். உழைக்கத் தயங்காதவர்களுக்கு, இங்கே உயர்வடையத் தடையில்லை. சென்னையில் பிறந்த பல சாதனையாளர்கள் உலகம் முழுவதும் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள்.
1639 ஆம் ஆண்டு தொடங்கி, கடந்த 384 ஆண்டுகளில், இந்திய அளவிலும், உலக அளவிலும் முக்கியமான நகரமாக உருவாகியிருக்கும் நமது சென்னை, இன்னும் பலப்பல நூற்றாண்டுகள் சீரும் சிறப்புமாக இருக்கவும், மேலும் பல சாதனையாளர்களை உருவாக்கவும் தமிழக பாஜக சார்பாக, அனைவருக்கும் இனிய #MadrasDay வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.