spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைஅஸ்வத்தாமன் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி வழக்கு - இரண்டு வாரங்களில்...

அஸ்வத்தாமன் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி வழக்கு – இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவு

-

- Advertisement -

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான வழக்கறிஞர் அஸ்வத்தாமனை, குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்ததை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோர் இரண்டு வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அஸ்வத்தாமன் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி வழக்கு - இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவு

we-r-hiring

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வியாசர்பாடியைச் சேர்ந்த பிரபல ரவுடி நாகேந்திரனின் மகனும் வழக்கறிஞருமான அஸ்வத்தாமனை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் அஸ்வத்தாமனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த செப்.19-ம் தேதி அன்று உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அஸ்வத்தாமனை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை எதிர்த்து ரத்து செய்யக்கோரி அஸ்வத்தாமனின் தாயார் விசாலாட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். தாய் விசாலாட்சி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசு, சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியது.

அந்த மனுவில், ”இயந்திரத்தனமாக அஸ்வத்தாமன் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளார் எனவும் குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்தது குறித்த உத்தரவு மற்றும் ஆவணங்களை உரிய நேரத்தில் அஸ்வத்தாமனிடம் வழங்கவில்லை.  இதற்கான ஆவணங்கள் புழல் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டும் அறிவுரைக் கழகமும் முறையாக பரிசீலிக்காமல் எங்களது கோரிக்கையை நிராகரித்து விட்டது. எனவும் தேசிய கட்சியில் நிர்வாகியாக இருந்த தனது மகனின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தனது மகனை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறைலடைத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.”

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பாக தமிழக உள்துறைச் செயலர் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்டோர் இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.

நாகூர் பிரியாணியும் , நயன்தாராவின் காதலனும்… விக்னேஷ் சிவன் சொன்ன உண்மை..!

MUST READ