தொடர் மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இன்று 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையத்தில் தொடர் மழை காரணமாக இன்று விமான பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இதனால் இன்று சென்னை விமான நிலையத்தில் 3 வருகை விமானங்கள் மற்றும் 3 புறப்பாடு விமானங்கள் என மொத்தம் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இன்று காலை 6.55 மணிக்கு சென்னையில் இருந்து மதுரை செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், காலை 10.35 மணிக்கு சென்னையில் இருந்து சேலம் செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மற்றும் பிற்பகல் 2.40 மணிக்கு சென்னையில் இருந்து சீரடி செல்ல வேண்டிய ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் விமானம் ஆகிய 3 புறப்பாடு விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதேபோல, இன்று காலை 10 மணிக்கு மதுரையில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், பகல் 1:40 மணிக்கு சீரடியில் இருந்து சென்னை வர வேண்டிய ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் விமானம் மற்றும் மாலை 6 மணிக்கு சேலத்தில் இருந்து சென்னை வர வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஆகிய 3 வருகை விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே, பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளதாலும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் நெருங்கி வருவதாலும் சென்னையில் மேலும் சில விமானங்கள் ரத்து ஆகலாம் என்று கூறப்படுகிறது. இதனால் விமான பயணிகள், தாங்கள் பயணிக்கும் விமான நிறுவனங்களை தொடர்புகொண்டு நிலவரங்களை கேட்டறிந்து பயணத் திட்டங்களை வகுத்துக்கொள்ளுமாறு, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்