சென்னையில் நடைபெற்று கொண்டு வரும் ஜி.கே.மூப்பனார் நினைவு நாள் நிகழ்ச்சியில் ஈ.பி.எஸ் மற்றும் அண்ணாமலை ஒன்றாக இணைந்து பங்கேற்றனர்.சென்னையில் த.மா.கா. நிறுவனர் ஜி.கே. மூப்பனாரின் 24வது நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் என்.டி.ஏ. தலைவர்கள் மரியாதை செலுத்தினர். ஜி.கே.மூப்பனார் நினைவிடத்தில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் இணைந்து எடப்பாடி பழனிசாமி, ஜி.கே.வாசன், நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். மூப்பனாா் நினைவிடத்தை தொடா்ந்து காமராஜ் நினைவிடத்திலும் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மரியாதை செலுத்தினா்.
இதனைத் தொடா்ந்து சென்னையில் மூப்பனார் நினைவு தின நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகிய இருவரும் ஒன்றாக ஒரே மேடையில் அமா்ந்து சகஜமாக உரையாடினா். முன்னதாக அண்ணாமலை மேடைக்கு வந்தவுடனேயே அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கைக் கொடுத்து சிரித்துக்கொண்டே வரவேற்றார்.
பட்டாசு ஆலை வெடிவிபத்து… உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிதி-முதல்வர் அறிவிப்பு
