(செப்டம்பர் 9) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தங்கத்தின் விலை குறையும் என காத்திருந்த பலருக்கும் அதிர்ச்சி மட்டும்தான் மிச்சம். ஏனெனில் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இனி வரும் நாட்களில் தங்கத்தை வாங்க முடியுமா என்பதே பலருக்கு கேள்விக்குறியாக உள்ளது. ஏனெனில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.80,000க்கு மேல் உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலை மட்டும் இல்லாமல் வெள்ளியின் விலையும் கடுமையாக அதிகரித்துள்ளது. நேற்று (செப்.8) சவரனுக்கு ரூ.720 என உயர்ந்த நிலையில், தொடர்ந்து இன்றும் தாறுமாறாக சவரனுக்கு ரூ.720 அதிகரித்துள்ளது. இதனால், தங்கம் கிராமிற்கு ரூ.90 உயர்ந்து, 1 கிரம் தங்கம் ரூ.10,150-க்கும், சவரனுக்கு ரூ.720 உயர்ந்து, 1 சவரன் தங்கம் ரூ.81,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வணிகத்தில் வெள்ளியில் மாற்றமின்றி 1 கிராம் ரூ.140 க்கும் , 1 கிலோ ரூ.1,40,000-க்கும் விற்பனையாகிறது.



