- Advertisement -
ஜனவரி 15ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னையில் டாஸ்மாக் கடைகள் விடுமுறை.
தமிழகத்தில் ஜனவரி 15 ஆம் தேதி ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினமான கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் செயல்படாது என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ராஷ்மி சித்தார்த் அறிவித்துள்ளார். கள்ளுண்ணாமையை வலியுறுத்தியவர் திருவள்ளுவர்.
அந்த வகையில் மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, முதல் மாவட்டமாக சென்னையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து பிற மாவட்டங்களிலும் அறிவிப்பு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.