- Advertisement -
ஓ.பி.எஸ் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாயார் உடல் நல குறைவால் கடந்த மாதம் மரணமடைந்த நிலையில், அவரது தாயார் மறைவிற்கு நேரில் இரங்கல் தெரிவித்தார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாயார் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்திற்கு நேரில் சென்று முதலமைச்சர் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் சேகர் பாபு உள்ளிட்டோர் தெரிவித்தனர்.

முன்னாள் முதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் தாயார் ஓ. பழனியம்மாள் நாச்சியார், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 24 ஆம் தேதி உயிரிழந்தார். தாயின் இறுதி அஞ்சலி நிறைவடைந்த பின்னர், ஓபிஎஸ் தற்போதுதான், சொந்த ஊரில் இருந்து சென்னை வருகிறார் என்பது குறிப்பிடதக்கது