Homeசெய்திகள்சென்னைபுத்தாண்டு - நட்சத்திர ஓட்டல்களுக்கு கட்டுப்பாடு - காவல் துறை

புத்தாண்டு – நட்சத்திர ஓட்டல்களுக்கு கட்டுப்பாடு – காவல் துறை

-

சென்னையில் நட்சத்திர ஓட்டல் உரிமையாளர்களுடன் சென்னை காவல்துறை புத்தாண்டு நிகழ்ச்சிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தியது. ஆலோசனை கூட்டத்திற்கு பின் காவல்துறை விதித்துள்ள நிபந்தனைகள் குறித்து ஓட்டல் நிர்வாகிகள் விளக்கம் அளித்தனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நட்சத்திர ஹோட்டல் நிர்வாகிகள், புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் 80% பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் நட்சத்திர ஓட்டல்களில் உள்ள நீச்சல் குளம் அருகே எந்த நிகழ்ச்சிகளையும் நடத்தக்கூடாது என்று காவல் துறை சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் நட்சத்திர ஹோட்டல்களில் புத்தாண்டு கொண்டாடக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தற்போது சென்னை காவல்துறை விடுத்து இருக்கிறது. ஆம்புலன்ஸ் சேவையோடு தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும். காவல்துறை தரப்பில் தரப்படும் QR CODE- ஐ குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் கார்களில் ஒட்ட வேண்டும். மேலும் அதிக போதையில் இருக்கும் நபர்களை உள்ளே அனுமதிக்க கூடாது என காவல்துறை அறிவுறுத்தியுள்ளதாக ஹோட்டல் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

MUST READ