கோட்சேவை புகழ்ந்த கோழிகோடு என்ஐடி- பேராசிரியர் சைஜா, டீனாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். கோழிகோடு தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் (என்ஐடி) இயக்குனரின் உத்தரவில், டாக்டர் ஷைஜா ஆணடவன் மார்ச் 7 முதல் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறையின் டீனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
டாக்டர் ஷைஜா கடந்த ஆண்டு பிப்ரவரியில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.மகாத்மா காந்தியின் நினைவு தினத்தன்று நாதுராம் கோட்சேவைப் புகழ்ந்ததற்காக வழக்கு நிலுவையில் உள்ள என்ஐடி-கோழிகோடு பேராசிரியர் சைஜா, திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறையின் தலைவராக (டீன்) நியமிக்கப்பட்டுள்ளார்.
வலதுசாரி வழக்கறிஞர் ஒருவர் பகிர்ந்த பதிவிற்கு பதிலளிக்கும் விதமாக, கோட்சேவைப் புகழ்ந்து சமூக ஊடகங்களில் பதிவிட்டதற்கு எதிராக டி.ஒய்.எஃப்.ஐ, எஸ்.எஃப்.ஐ மற்றும் இளைஞர் காங்கிரஸ் போன்ற அமைப்புகளிடமிருந்து வந்த புகார்களைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஷைஜா கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
மகாத்மா காந்தியைக் கொன்றதற்காகவும், அதன் மூலம் “இந்தியாவைக் காப்பாற்றியதற்காக” கோட்சே மீது பெருமைப்படுவதாக ஷைஜா தனது கருத்தை பதிவு செய்திந்தார்.ஷைஜாவின் டீன் நியமனத்தை அரசியல் கட்சிகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. கம்யூனிஸ்டு கட்சியின் இளைஞர் பிரிவான டி.ஒய்.எஃப்.ஐ என்.ஐ.டிக்கு எதிராக எதிர்ப்பு பேரணி நடத்துவதாக அறிவித்துள்ளது.
“சுமூகமான மாற்றத்தை” எளிதாக்குவதற்காக, தற்போதைய டீன் டாக்டர் பிரியா சந்திரனுடன் இணைந்து மார்ச் 7 ஆம் தேதி வரை பணியாற்ற ஷைஜாவுக்கு இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவின்படி, இந்த நியமனம் ஆரம்பத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு அல்லது மறு உத்தரவு வரும் வரை தொடரும்.
சாத்தமங்கலத்தில் உள்ள அவரது வீட்டில் குன்னமங்கலம் போலீசாரால் ஷைஜா விசாரிக்கப்பட்டார். குன்னமங்கலம் நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீன் வழங்கியது.கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் வேண்டுமென்றே தூண்டுதல் செய்தல் பிரிவு 153-ன் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.