spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசென்னையில் 3-வது நாளாக செவிலியர்கள் போராட்டம்

சென்னையில் 3-வது நாளாக செவிலியர்கள் போராட்டம்

-

- Advertisement -

சென்னையில் 3-வது நாளாக செவிலியர்கள் போராட்டம்

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே எம்.ஆர்.பி கோவிட் செவிலியர்களுக்கு உயர்நீதிமன்ற உத்தரவின்படி பணி நியமனம் வழங்க வலியுறுத்தி 600 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மூன்றாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்று தகுதியின் அடிப்படையில் 2020 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் 6000 செவிலியர் பணியாளர்களாக பணியில் ஈடுபட்டனர். இதில் 3000 மேற்பட்டோர் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்.2022 ஆம் ஆண்டு எந்த வித முன்னறிவிப்பும் இன்றி 3200 மேற்பட்டோர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

we-r-hiring

பின்னர் தமிழக அரசு மதிப்பெண் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பணியில் அமர்த்தப்படும் தெரிவித்தது.ஆனால் பணி நிரந்தரம் செய்யாததால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்பின் பணி வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கிய பிறகும் 45 நாட்களுக்குள் பணி வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற உத்தரவிட்டது.ஆனால் இதுவரை பணி ஆணை வழங்காத காரணத்தினாலும் தேர்தல் வாக்குறுதி 356 இல் கொரோனா செவிலியர்கள் பணி நியமனம் செய்வோம் என திமுக அரசு வாக்குறுதி அளித்தனர்.

Nurse protest

அதனை நிறைவேற்றும் வகையில் 3000-க்கும் மேற்பட்ட செவிலியர்களை மூன்று நாட்களுக்குள் பணியில் சேர அரசாணை பிறப்பிக்கப்பட்டு பணியில் சேர முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

MUST READ