Homeசெய்திகள்சென்னைஒரு தீவிரவாதி ஊடுருவிவிட்டான் என்று சொல்வதே தோல்வி - சீமான் பேட்டி

ஒரு தீவிரவாதி ஊடுருவிவிட்டான் என்று சொல்வதே தோல்வி – சீமான் பேட்டி

-

- Advertisement -

ஒரு தீவிரவாதி ஊடுருவி விட்டான் என்று சொல்வதே தோல்வி. இது நம் நாட்டின் பாதுகாப்பின் பலவீனத்தை காட்டுகிறது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்துள்ளாா்.ஒரு தீவிரவாதி ஊடுருவிவிட்டான் என்று சொல்வதே தோல்வி - சீமான் பேட்டிசென்னையில் நிழற்குடை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய போது, அதிகாரத்தில் இருப்பதால் அவர்கள் அவங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்பா  பெயரை வைத்து வைத்து பார்க்கிறார்கள். இந்த அதிகாரம் நிலையானது இல்லை என்று அவர்களுக்கு தெரியாது. ஒரு நாள் அதிகாரம் மாறிடுச்சுன்னா அந்த பெயரும் மாறிடும்.

நடிகர் விஜயுடன் கூட்டணி வைப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, அண்ணன் தம்பியாக இருந்தாலும் கொள்கைகளும் பாதைகளும் வேறு வேறு ஆகிவிட்டது. அண்ணன் தம்பி  உறவு தான் இருக்கிறது கொள்கை உறவு இல்லை. பாமக  மாநாட்டிற்கு அழைப்பிதழ் வந்துள்ளது. அதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளேன். எங்கள் ஐயா கூப்பிட்டா போவேன்.

செந்தில் பாலாஜி விவாகரத்தில் உனக்கு அது வேணுமா இது வேணுமா கேட்பது நீதிமன்றத்தின் வேலை இல்லை நீதிமன்றம் தீர்ப்பை தான் சொல்லணும். ஒரு தீவிரவாதி ஊடுருவிவிட்டான் என்று சொல்வதே தோல்வி. இது நம் நாட்டின் பாதுகாப்பின் பலவீனத்தை காட்டுகிறது. என் வீட்டிற்கு ஒரு காவலன் போடுறேனா திருடு வரும்போது அவனை விரட்டி பிடிக்க வா? இல்ல திருடிட்டு  போன பிறகு அவனை விரட்டி பிடிக்கவா?

இதை நம் பாதுகாப்பின் குறைபாடு அதை விட்டுவிட்டு ஒரு மதத்தின் மீது குறை கொள்வதை ஏற்க முடியாது. எந்த மதத்தில் தான் தீவிரவாதம் இல்லை. திடீர்னு ஒரு வன்முறை நடந்தால் அதை ஒரு மதத்தின் மீது பழி போடுவது ஏற்புடையது அல்ல. சீனா கூட அருணாச்சல் பிரதேசம் என்னதுன்னு சொல்றான் அவன்கிட்ட போர் தொடுப்பீர்களா? எனவே ராணுவத்துல பலமா இருக்கிறான். பாகிஸ்தான் நீங்க டெத்து போட்டவன் சின்ன நாடு. ஆனால் மிரட்டி பாக்குறீங்க என பேசி உள்ளார்.

அன்புமணி ராமதாஸ் மீது பதியபட்ட வழக்கு ரத்து – சென்னை உயர் நீதிமன்றம்

MUST READ