![மாணவனைக் கடத்திய மூன்று பேர் கைது!](https://www.apcnewstamil.com/wp-content/uploads/2023/06/aavdi-1.jpg)
பள்ளி மாணவனைக் கடத்தியதாக மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மகேஷ் பாபு ராஜமௌலி கூட்டணியின் புதிய பட அப்டேட்!
சென்னையை அடுத்த ஆவடி கோவில்பதாகையைச் சேர்ந்த சுகுமாரன் என்பவர், 10- ஆம் வகுப்பு படித்து வருகிறார். திரையரங்கத்தில் இரவுக் காட்சியைப் பார்த்துவிட்டு வீடு திரும்பிய போது, இரண்டு சக்கர வாகனங்களில் வந்த ஏழு பேர் கத்தியால் தாக்கி மாணவனைக் கடத்தியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து மாணவனின் உறவினர்கள் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
ப்ளூ சட்டை மாறனுக்கு நன்றி சொன்ன அசோக் செல்வன்… ஏன் தெரியுமா!?
இதையடுத்து, இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மூன்று பேரை கைது செய்தனர். மேலும் நான்கு பேரைத் தேடி வருகின்றனர். மாணவனைக் கடத்திய சம்பவம் ஆவடி பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.