- Advertisement -
எண்ணூரில் கடல் அரிப்பு, எண்ணூர் தாழாங்குப்பம் பகுதியில் கடல் அலை சீற்றத்துடன் தடுப்பு கற்களை தாண்டி அடிக்கும் நிலையில் கடற்கரை ஒட்டிய எண்ணூர் தாழங்குப்பம் சாலை மணல் அரிப்பால் காட்சியளிக்கின்றன.
எண்ணூரில் இருந்து திருவொற்றியூர் காசிமேடு வழியாக பாரிமுனை செல்லும் இந்த சாலையானது கடற்கரை ஒட்டி பயணிப்பதால் கடல் அலையின் சீற்றத்தின் காரணமாக சாலையில் மணல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. சாலை ஓரமாக சாலை முழுவதுமே கடல் ஆக்ரோஷ சீற்றத்தினால் மணல் அரிப்பு திட்டுகளாக காட்சியளிக்கின்றன. இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் செல்வதனால் உடனடியாக தடுப்பு கற்களை போட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.