பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
நாளை 6 வார்டுகளில் நடைபெறவுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (01.08.2025) திருவொற்றியூர் மண்டலம், வார்டு-5ல் சௌந்தர பாண்டி நகரில் உள்ள வி.கே மஹால், இராயபுரம் மண்டலம், வார்டு-55ல் ஏழு கிணறு, புனித சேவியர் தெருவில் உள்ள சமூகநலக்கூடம், அண்ணாநகர் மண்டலம், வார்டு-98ல் கீழ்ப்பாக்கம், ஆஸ்பிரன் கார்டன் முதல் தெருவில் உள்ள 98வது வார்டு அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. இதேபோல், கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-127ல் கோயம்பேடு, காளியம்மன் கோயில் தெரு, சென்னைக் குடிநீர் வாரிய வளாகத்தில் உள்ள பேட்டரி மூன்று சக்கர வாகன நிறுத்துமிடம், ஆலந்தூர் மண்டலம், வார்டு-157ல் ஆற்காடு சாலையில் உள்ள சான்றோரகம் அரங்கம், அடையாறு மண்டலம், வார்டு-173, கஸ்தூரிபாய் நகரில் உள்ள சமூக நலக் கூடம் ஆகிய 6 வார்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறவுள்ளது.
இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.