Homeசெய்திகள்சென்னைநொளம்பூரில் காணாமல் போன குழந்தையை 4 மணி நேரத்தில் மீட்ட போலீசார்

நொளம்பூரில் காணாமல் போன குழந்தையை 4 மணி நேரத்தில் மீட்ட போலீசார்

-

நொளம்பூரில் காணாமல் போன குழந்தையை 4 மணி நேரத்தில் மீட்ட போலீசார்

சென்னை நொளம்பூரில் தவறுதலாக ஓலா கால் டாக்ஸியில் ஏறிச்சென்ற குழந்தையை போலீஸார் 4 மணி நேரத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.  தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை  காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் சுரேஷ்குமார் வயது 41.   தனது  சித்தப்பா வீட்டு திருமணத்திற்காக குடும்பத்துடன் நேற்று  சென்னை வந்த அவர்,  நொளம்பூரில்  உள்ள VGN அவென்யூவில் செயல்பட்டு வரும் அதிதி ஹோம் ஸ்டேவில் தங்கியுள்ளார்.

நொளம்பூரில்  காணாமல் போன குழந்தையை 4 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
குழந்தையை 4 மணி நேரத்தில் மீட்ட போலீசார்

பின்னர் காலை 8 மணியளவில் வானகரத்தில் உள்ள உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு கிளம்பி  வெளியே வந்த பொழுது அங்கு விளையாடிக் கொண்டிருந்த அவருடைய 6 வயது மகன் பிரவீன்ராஜ் காணவில்லை.  இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அங்கு இருக்கக்கூடிய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அந்த வழியாக வந்த OLA கால் டாக்ஸியில் குழந்தை ஏறிச் சென்றது தெரியவந்தது.

நொளம்பூரில்  காணாமல் போன குழந்தையை 4 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
பிரவீன்ராஜ்

இந்த நிலையில் அருகில் இருக்கக்கூடிய நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், சிசிடிவி காட்சி அடிப்படையில்  4 மணி நேரத்தில்  திருமங்கலம் காவல் உதவி ஆணையர் வரதராஜன் தலைமையிலான ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் தனிப்படை போலீசார்  குழந்தையை மீட்டனர்.

VGN அவென்யூ வாசலில் நின்றிருந்த ஓலா கால் டாக்சியில், திருமண நிகழ்ச்சிக்கு செல்வதற்காக வேறொரு குடும்பத்தினர் ஏறியுள்ளனர். அவர்களுடன் குழந்தை பிரவீன்ரஜும் ஏறிச்சென்றது தெரியவந்தது.  டாக்சி ஓட்டுநர் குழந்தையை அந்தக் குடும்பத்தில் ஒருவர் என எண்ணி அழைத்துச் சென்றுள்ளார். டாக்சியில் ஏறிய அந்த குடும்பத்தினரோ அது ஓட்டுநரின் குழந்தை என தவறுதகால நினைத்துள்ளனர்.

நொளம்பூரில்  காணாமல் போன குழந்தையை 4 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
குழந்தையின் தாய் கண்ணீர் மல்க கட்டியணைத்த காட்சி

அத்துடன் திருமண நிகழ்ச்சியில் அந்தக் குடும்பத்தினர் இறங்கிய போது, குழந்தை பிரவின் ராஜுன் இறங்கிவிட்டதால் ஓட்டுநருக்கு எந்த சந்தேகமும் ஏற்படவில்லை. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குழந்தை கல்யாண மண்டபத்தில் இறங்கிச் சென்றதை அறிந்து, குழந்தையை கண்டுபிடித்தனர்.   பின்னர் குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது குழந்தையின் தாய் கண்ணீர் மல்க கட்டியணைத்த காட்சி காண்போரை கலங்கச் செய்தது.

MUST READ