Homeசெய்திகள்சென்னைஓணம் பண்டிகை- சென்னை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

ஓணம் பண்டிகை- சென்னை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

-

ஓணம் பண்டிகை- சென்னை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

ஓணம் பண்டிகை

ஓணம்‌ பண்டிகை சென்னை மாவட்டத்திற்கு உள்ளூர்‌ விடுமுறை  ஓணம்‌ பண்டிகையை முன்னிட்டு, 29.08.2028 தேதி செவ்வாய்கிழமை சென்னை மாவட்டத்திற்கு அரசு ஆணைப்படி உள்ளூர்‌ விடுமுறை அளிக்கப்படுகிறது. மேற்படி உள்ளூர்‌ விடுமுறைக்கு பதில்‌ 02.09.2023 சனிக்கிழமை அன்று சென்னை மாவட்டத்தில்‌ உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள்‌ மற்றும்‌ கல்வி நிறுவனங்களுக்கு பணிநாளாக அறிவிக்கப்படுகின்றது.

ஆயினும்‌ உள்ளூர்‌ விடுமுறை நாளான 29.08.2028 அன்று அவசர அலுவல்களை கவனிக்கும்‌ பொருட்டு, சென்னை மாவட்டத்தில்‌ உள்ள கருவூலம்‌ மற்றும்‌ சார்நிலை கருவூலகங்கள்‌ குறிப்பிட்ட பணியாளர்களைக்‌ கொண்டு பொது மக்களுக்கு சிரமம்‌ ஏற்படாதவாறு செயல்படும்‌ என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ மு.அருணா அறிவித்துள்ளார்‌.

கோவை, திருப்பூர், கன்னியாகுமரி மாவட்டங்களிலும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

MUST READ