![பட்டாபிராம் அருகே ரயில் என்ஜின் பழுதாகி பயணிகள் பாதிப்பு!](https://www.apcnewstamil.com/wp-content/uploads/2023/06/ra.jpg)
ஆவடி அருகே அம்சவர் எக்ஸ்பிரஸ், ரயில் என்ஜின் பழுதாகி பட்டாபிராம் அருகே நின்றதால் பயணிகள் பாதிப்படைந்தனர். ஆவடி அடுத்த பட்டாபிராம் நெமிலிச்சேரி இடையே பாட்னாவில் இருந்து பெங்களூரு செல்லக்கூடிய விரைவு எக்ஸ்பிரஸ் இரயில் என்ஜின் பழுது காரணமாக பட்டாபிராம் நெமிலிச்சேரி இடையே நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனர்.
மேலும் தகவல் அறிந்து ஆவடி இரயில்வே பணியாளர்கள் விரைந்து வந்து என்ஜின் பழுதை சரிபார்த்தனர். சுமார் ஒரு மணி நேரம் பழுதை சரிபார்த்து மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியது.
ஒரு மணி நேரமாக ரயில் பயணிகள் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை மிகவும் அவதிக்குள்ளானார்கள். மேலும் அவ்வழியில் குறிப்பிட்ட நேரத்தில் செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்னையில் இருந்து அரக்கோணம் வரை செல்லக்கூடிய தண்டவாளத்தில் மாற்றுப்பாதையில் தாமதமாக அனுப்பி வைத்தனர். இதனால் பட்டாபிராம் நெமிலிச்சேரி இடையிலான அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.