லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் பிரபல நடிகை ஒருவர் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் ‘மாநகரம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அதை தொடர்ந்து இவர் இயக்கிய ‘கைதி’ திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்த நிலையில், மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய படங்களையும் இயக்கி ட்ரெண்டிங் இயக்குனராக மாறினார். ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இவரது இயக்கத்தில் வெளியான ‘கூலி’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனை அடுத்து லோகேஷ், ‘கைதி 2’ படத்தை கையில் எடுக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது. அதே சமயம் இவர் ஹீரோவாகவும் உருவெடுத்து புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க சமீபத்தில் படப்பிடிப்புகளும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், இந்த படத்தின் படப்பிடிப்பில் நடிகை வாமிகா கேபி இணைந்திருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆரம்பத்தில் இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிப்பதாக செய்திகள் வெளியானது. எனவே இனிவரும் நாட்களில் மற்றொரு நடிகை குறித்த விவரம் வெளியாகும் என்று நம்பப்படுகிறது. மேலும் இந்த படமானது ஆக்சன் கலந்த கேங்ஸ்டர் படமாக உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


