விஜயின் 69வது படமாக உருவாகி வரும் ஜனநாயகன் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வர தயாராகி வருகிறது. ஹெச். வினோத் இயக்கும் இந்த படத்தை கே வி என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத்தின் இசையிலும் சத்யன் சூரியனின் ஒளிப்பதிவிலும் இப்படம் தயாராகி வருகிறது. அரசியல் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் நடிக்கின்றனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படத்தில் நடிகர் விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அதன்படி ஏற்கனவே படப்பிடிப்புகள் தொடங்கி ஏறத்தாழ முடிவுக்கு வர இருக்கிறது. நேற்று (ஜூன் 2) விஜயின் போர்ஷன் நிறைவடைந்ததாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இந்த படமானது நந்தமுரி பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்றும் பல தகவல்கள் வெளியானது.
ஆனால் அதன் பிறகு, பகவந்த் கேசரி படத்தில் இருப்பதைப் போன்று ஓரிரு காட்சிகள் ஜனநாயகன் படத்தில் இருக்கும் என்பதால் படக்குழு, ரீமேக் உரிமையை பெற்றுள்ளது என்றும் தகவல் கசிந்தது. இந்நிலையில் இது தொடர்பாக பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதன்படி அவர், “ஜனநாயகன் படம் ரீமேக் ஆக இருந்திருந்தால் அதை அவர்கள் முன்கூட்டியே சொல்லி இருப்பார்கள். ஓரிரு காட்சிகள் ஒற்றுமையாக இருக்கும் என்பதால் கூட அவர்கள் ரீமேக் கூறிமையை பெற்றிருக்கலாம்” என்று கூறியுள்ளார்.
‘ஜனநாயகன்’ படத்திற்கு ‘பகவந்த் கேசரி’ பட உரிமையை பெற்றதற்கு காரணம் இதுதான்…. பிரபல தயாரிப்பாளர் பேட்டி!
-
- Advertisement -