- Advertisement -
நான் கவலையாக இருக்கும்போது எம்ஜிஆர் சொன்ன ஒரு வார்த்தை தன்னை முழுமையாக மாற்றியது என நடிகர் சிரஞ்சீவி பேசியுள்ளார்.
தெலுங்கில் மெகா ஸ்டாராக வலம் வருபவர் சிரஞ்சீவி. சிரஞ்சீவி நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் போலா சங்கர். இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை என்பதால் தனது அடுத்த படத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் நடிகர் சிரஞ்சீவி. சிரஞ்சீவி நடிக்கும் 156 வது படத்தை யூவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதனை பிம்பிசாரா படத்தின் இயக்குனர் வசிஷ்டா இயக்குகிறார். இந்த படத்தின் அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி இருந்தது. அதைத் தொடர்ந்து படப்பிடிப்புகளும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
