சந்தானம் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் தான் டிடி நெக்ஸ்ட் லெவல். இந்த படமானது சந்தானத்தின் தில்லுக்கு துட்டு 1, 2 மற்றும் டிடி ரிட்டன்ஸ் ஆகிய படங்களை போல் ஹாரர் கலந்த காமெடி கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது. இதனை டிடி ரிட்டன்ஸ் படத்தை இயக்கிய பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தை நடிகர் ஆர்யா, நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார். ஆஃப்ரோ இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் சந்தானம் தவிர கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன், கஸ்தூரி, யாஷிகா ஆனந்த், மொட்ட ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, நிழல்கள் ரவி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி வருகின்ற மே மாதம் 16ஆம் தேதி திரைக்கு வர உள்ள இந்த படத்திற்கான ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டியில் சந்தானம், நடிகை கஸ்தூரி குறித்து பேசி உள்ளார்.
அதன்படி அவர், “டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் எனக்கு அம்மாவாக கஸ்தூரியும், அப்பாவாக நிழல்கள் ரவியும் நடித்திருக்கின்றனர். தங்கையாக யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார். கஸ்தூரி மேடம் கிட்ட இந்த படத்துல எனக்கு அம்மா கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று கேட்டபோது, என்னது நான் சந்தானத்திற்கு அம்மாவா? என்று ஷாக் ஆயிட்டாங்க. கதையை கேட்டுட்டு முடிவை சொல்லுங்க என்று கதையை சொன்னதும் நடிக்க சம்மதித்தார். கஸ்தூரியின் கதாபாத்திரத்தில் திடுக்கிடும் திருப்பங்கள் நிறைய இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -