நடிகர் சித்தார்த்தின் புதிய படம் விரைவில் திரைக்கு வர இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சித்தார்த். அந்த வகையில் இவர் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து தனக்கென தனி ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார். மேலும் இவர் நடிகர் மட்டுமல்லாமல் பாடகர், உதவி இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர். இந்நிலையில் தான் இவரது நடிப்பில் வெளியான சித்தா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது. அடுத்தது இவர் இந்தியன் 2, மிஸ் யூ ஆகிய படங்களில் நடித்திருந்தார். ஒரு கன்னட படம் உள்ளிட்ட இன்னும் சில படங்களில் கமிட் ஆகியுள்ளார் சித்தார்த். இதற்கிடையில் இவர், 3BHK என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் சித்தார்த்தின் 40வது படமாகும். இதனை சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்க ஸ்ரீ கணேஷ் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
இதில் சரத்குமார், தேவயானி, மீதா ரகுநாத், சைத்ரா ஆச்சர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குடும்ப பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இதன் டைட்டில் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இப்படம் 2025 மே மாதத்தில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் நம்பப்படுகிறது.
- Advertisement -